தெலங்கானா: தெலங்கானா மாநிலம் தும்முகுடேம் மண்டலம் டப்பானுடலா கிராமத்தைச் சேர்ந்தவர் சீலம் கங்கா பவானி. இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக பத்ராசலம் அரசு மருத்துவமனையில் கடந்த மே 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி வந்ததையடுத்து, மே 3ஆம் தேதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். பவானி, 5 கிலோ எடையில் அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்தார். தாய், குழந்தை நலமுடன் உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் மேலும் கூறுகையில், 5 கிலோ எடையில் குழந்தை பிறப்பது அரிது. சீலம் கங்கா பவானி ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டார். அரசு மருத்துவமனையில் தான் அவர் பரிசோதனை மேற்கொண்டார் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒரே மாதிரி அழகாக எழுதும் பள்ளி மாணவர்கள்!