ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் 4 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் 4 கிலோ போதைப் பொருளை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

author img

By

Published : Nov 3, 2020, 4:47 PM IST

narcotics-seized
narcotics-seized

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் தர்கலூன் பகுதியில், போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, குர்சாய் பகுதி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 4 கிலோ எடைகொண்ட போதைப் பொருள் சிக்கியது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "பறிமுதல் செய்யப்பட்ட 4 கிலோ எடைகொண்ட போதைப் பொருள், ஹெராயின் என அறியப்பட்டுள்ளது. அதன் மதிப்பு பல லட்சம் இருக்கலாம். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் தர்கலூன் பகுதியில், போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, குர்சாய் பகுதி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 4 கிலோ எடைகொண்ட போதைப் பொருள் சிக்கியது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "பறிமுதல் செய்யப்பட்ட 4 கிலோ எடைகொண்ட போதைப் பொருள், ஹெராயின் என அறியப்பட்டுள்ளது. அதன் மதிப்பு பல லட்சம் இருக்கலாம். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காரில் போதைப்பொருள் கடத்திய காவலர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.