ETV Bharat / bharat

அக்னிபத் திட்டம் குறித்த வதந்தி - 35 வாட்ஸ் அப் குரூப்களுக்கு தடை

அக்னிபத் திட்டம் குறித்து தவறான செய்திகளை பரப்பியதற்காக 35 வாட்ஸ் அப் குரூப்களை அரசு தடை செய்துள்ளது.

author img

By

Published : Jun 20, 2022, 10:08 AM IST

Updated : Jun 20, 2022, 10:22 AM IST

35 வாட்சப் குரூப்களுக்கு தடை- அக்னிபத் திட்டம் குறித்த வதந்திகள்
35 வாட்சப் குரூப்களுக்கு தடை- அக்னிபத் திட்டம் குறித்த வதந்திகள்

டெல்லி: அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் குறித்து போலியான செய்திகளை பரப்பியாதாக 35 வாட்ஸ்அப் குழுக்களை நேற்று (ஜூன் 19) மத்திய அரசு தடை செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குழுக்களைப் பற்றிய தகவல் அல்லது அவற்றின் நிர்வாகிகளுக்கு(அட்மின்) எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை. சமூக வலைதளம் மூலம் போலி தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பரவலான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் 'அக்னிபத்' ஆட்சேர்ப்புத் திட்டத்தை திரும்பப் பெறுவதை நிராகரித்து, இராணுவத்தின் முப்படைகளும் நேற்று இக்கொள்கையின் கீழ் சேர்வதற்கான தகுதிகள் அடங்கிய பட்டியல்களை வெளியிட்டன. இத்திட்டம் மூலம் ஆயுதப்படை வீரர்களுக்கான வயது வரம்பை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க:அக்னிபத் போராட்டம் - கண்காணிக்கப்படும் இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்கள்

டெல்லி: அக்னிபத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் குறித்து போலியான செய்திகளை பரப்பியாதாக 35 வாட்ஸ்அப் குழுக்களை நேற்று (ஜூன் 19) மத்திய அரசு தடை செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குழுக்களைப் பற்றிய தகவல் அல்லது அவற்றின் நிர்வாகிகளுக்கு(அட்மின்) எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை. சமூக வலைதளம் மூலம் போலி தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பரவலான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் 'அக்னிபத்' ஆட்சேர்ப்புத் திட்டத்தை திரும்பப் பெறுவதை நிராகரித்து, இராணுவத்தின் முப்படைகளும் நேற்று இக்கொள்கையின் கீழ் சேர்வதற்கான தகுதிகள் அடங்கிய பட்டியல்களை வெளியிட்டன. இத்திட்டம் மூலம் ஆயுதப்படை வீரர்களுக்கான வயது வரம்பை குறைக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க:அக்னிபத் போராட்டம் - கண்காணிக்கப்படும் இளைஞர்களின் வாட்ஸ்அப் குழுக்கள்

Last Updated : Jun 20, 2022, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.