உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள அனல் மின் நிலையத்தில் உள்ள கொள்கலன் இன்று(ஏப்.4) வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த வெடி விபத்தில் 13 தொழிலாளர்கள் சிக்கி படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதில், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கொள்கலன் வெடிப்பு குறித்து உடனடி விசாரணை நடத்தவும், படுகாயமடைந்தவர்களுக்கு அனைத்து விதமான உதவிகள் வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு - 2 பேர் கவலைக்கிடம்!