ETV Bharat / snippets

நீலகிரி: குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

மண் சரிவில் உயிரிழந்த பெண் ஜெயலட்சுமி
மண் சரிவில் உயிரிழந்த பெண் ஜெயலட்சுமி (Credits - ETV Bharat Tamil Nadu)

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவும், மரங்கள் விழுந்தும் விபத்துக்கள் ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், குன்னூர் மவுண்ட் ரோடு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் படிக்கட்டு நடுப்பகுதியில் நேற்று (செப்.29) இரவு பெய்த பலத்த மழையில் அப்பகுதியில் வசிக்கும் ரவி என்பவரது வீட்டினுள் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், கதவு இடுக்கில் தண்ணீர் வந்ததைக் கண்ட வீட்டிலிருந்த ரவியின் மனைவி ஜெயலட்சுமி கதவைத் திறந்த போது திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ஜெயலட்சுமியை மண் மூடியுள்ளது. மேலும், ரவியின் குடும்பத்தினர் வீட்டின் உள்பக்கம் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், 2 மணி நேரமாகப் போராடி ஜெயலட்சுமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவும், மரங்கள் விழுந்தும் விபத்துக்கள் ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், குன்னூர் மவுண்ட் ரோடு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் படிக்கட்டு நடுப்பகுதியில் நேற்று (செப்.29) இரவு பெய்த பலத்த மழையில் அப்பகுதியில் வசிக்கும் ரவி என்பவரது வீட்டினுள் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், கதவு இடுக்கில் தண்ணீர் வந்ததைக் கண்ட வீட்டிலிருந்த ரவியின் மனைவி ஜெயலட்சுமி கதவைத் திறந்த போது திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ஜெயலட்சுமியை மண் மூடியுள்ளது. மேலும், ரவியின் குடும்பத்தினர் வீட்டின் உள்பக்கம் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், 2 மணி நேரமாகப் போராடி ஜெயலட்சுமியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.