ETV Bharat / snippets

கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 10:46 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகையும், அதிலிருந்து ஒன்பது மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர், கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகையும், அதிலிருந்து ஒன்பது மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர், கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.