ETV Bharat / snippets

முதுமலை யானைகள் முகாமில் 9 மாத குட்டி யானை உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 2:02 PM IST

உயிரிழந்த குட்டி யானை
உயிரிழந்த குட்டி யானை (Credits- ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த 9 மாத குட்டி பெண் யானை இன்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 9ஆம் தேதி சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை மீட்கப்பட்டு, முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 8 மாதங்களாக முதுமலை யானைகள் முகாமில் இந்த குட்டியானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. தற்போது, குட்டி யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவ்விடத்திலேயே புதைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த 9 மாத குட்டி பெண் யானை இன்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 9ஆம் தேதி சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை மீட்கப்பட்டு, முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 8 மாதங்களாக முதுமலை யானைகள் முகாமில் இந்த குட்டியானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. தற்போது, குட்டி யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவ்விடத்திலேயே புதைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.