ETV Bharat / snippets

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோவில் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

Updated : 4 hours ago

அன்னூர் காவல் நிலையம்
அன்னூர் காவல் நிலையம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை அன்னூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சமூக அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியை, பள்ளியில் மாணவிகளிடம் அநாகரிகமாகவும், அத்துமீறியும் செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு குறிப்பிட்ட ஆசிரியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதைக்கேட்ட மாணவியின் பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து, இந்த புகார் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணையானது நடைபெற்றுள்ளது. குற்றம் நடந்ததை உறுதி செய்த போலீசார், மாணவியிடம் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோயம்புத்தூர்: 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை அன்னூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சமூக அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியை, பள்ளியில் மாணவிகளிடம் அநாகரிகமாகவும், அத்துமீறியும் செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு குறிப்பிட்ட ஆசிரியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அதைக்கேட்ட மாணவியின் பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து, இந்த புகார் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணையானது நடைபெற்றுள்ளது. குற்றம் நடந்ததை உறுதி செய்த போலீசார், மாணவியிடம் பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Last Updated : 4 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.