ETV Bharat / snippets

பாரில் நடனமாடிய கல்லூரி மாணவர் திடீரென உயிரிழப்பு.. நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 3:17 PM IST

உயிரிழந்த மாணவர் முகமது சுகைல்
உயிரிழந்த மாணவர் முகமது சுகைல் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நுங்கம்பாக்கத்தில் தனியார் மதுபான பாரில் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், அப்பகுதியில் உள்ள PG ஹாஸ்டலில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபான பாருக்குச் சென்றுள்ளார். அங்கு, நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரது நண்பர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முகமது சுகைல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது உடல் கேஎம்சி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: நுங்கம்பாக்கத்தில் தனியார் மதுபான பாரில் நடனமாடிய கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், அப்பகுதியில் உள்ள PG ஹாஸ்டலில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபான பாருக்குச் சென்றுள்ளார். அங்கு, நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரது நண்பர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், முகமது சுகைல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது உடல் கேஎம்சி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.