தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், ஜெயிலர் படத்தில் நடித்தவருமான பதம் குமார் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த அவருடன் நின்று பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, தான் நடித்த ஜெயிலர் திரைப்படம் தமிழ் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது எனவும், இயக்குநர் நெல்சன் தயாரித்து நடிகர் கவின் நடித்து வரும் பிளடி பெக்கர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறிய அவர், அக்டோபர் மாதம் தொடங்க உள்ள ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க உள்ளதாக கூறினார்.