ETV Bharat / state

கொலை செய்யப்பட்டு வாஷிங் மெஷினில் மூட்டைக்கட்டி வைக்கப்பட்ட மூன்று வயது சிறுவன்; திருநெல்வேலியில் கொடூர சம்பவம் - 3 years old male baby child murder

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 4:56 PM IST

3 Years Old Male Baby Child Murder: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் முன்பகை காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்து வாஷிங்மெசினில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் சிறுவன் காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோர்கள் குழந்தையை தேடி உள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதனால் குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அப்பகுதியில் விசாரிக்கும் போது குழந்தை எதிர்வீட்டை சேர்ந்த தங்கம் என்ற பெண் வீட்டுக்குள் சென்றதை சிலர் கூறியுள்ளனர். எனவே, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது குழந்தையை கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்து, வாஷிங் மிசினில் வைத்திருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக தங்கம், குழந்தையை மிக கொடூரமாக கொலை செய்து வாஷிங் மிஷினில் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 3 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் சிறுவன் காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோர்கள் குழந்தையை தேடி உள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. அதனால் குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அப்பகுதியில் விசாரிக்கும் போது குழந்தை எதிர்வீட்டை சேர்ந்த தங்கம் என்ற பெண் வீட்டுக்குள் சென்றதை சிலர் கூறியுள்ளனர். எனவே, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது குழந்தையை கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்து, வாஷிங் மிசினில் வைத்திருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்பகை காரணமாக தங்கம், குழந்தையை மிக கொடூரமாக கொலை செய்து வாஷிங் மிஷினில் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 3 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : திருப்பூரில் பயங்கரம்..! மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன் தானும் தற்கொலை - காரணம் என்ன? - TIRUPUR GUN SHOT ISSUE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.