புடவை அணிந்து 'அரோகரா' கோஷத்துடன் நடனமாடிய ஸ்பெயின் நாட்டுப் பெண்.. வீடியோ வைரல்..!
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Feb 18, 2024, 6:13 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18-02-2024/640-480-20781786-thumbnail-16x9-dgl.jpg)
திண்டுக்கல்: பழனி கோயிலுக்கு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் பக்தர் பச்சை புடவை அணிந்து 'அரோகரா' கோஷத்துடன் கிரிவலப் பாதையில் நடனமாடி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா (47) கேரள மாநிலம் மூணாற்றிலிருந்து பாத யாத்திரையாக வந்து திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுத சுவாமியைத் தரிசனம் செய்தார். முருகப் பெருமானை வேண்டி மாலை அணிந்தும், புடவை அணிந்தும் வந்திருந்த அவர் கேரள மாநிலம், மூணாற்றைச் சேர்ந்த பக்தர்கள் குழுவுடன் வந்ததாகத் தெரிவித்தார். கடந்த 15-ஆம் தேதி பாத யாத்திரையாகப் புறப்பட்ட குழுவினர் 16 ஆம் தேதி உடுமலை அமராவதி வழியாகப் பழனி சண்முக நதி வந்தனர்.
இங்குப் புனித நீராடி விட்டு, பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு திருஆவினன்குடி வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, மூணாறுக்கு சுற்றுலா வந்த போது பாதயாத்திரை பற்றித் தெரியவந்ததாகவும், அங்குள்ள பக்தர்கள் பழனிக்குப் பாதயாத்திரை செல்லும் போது அவர்களுடன் சேர்ந்து இந்த முறை மாலையணிந்து வந்ததாகவும் மரியா தெரிவித்தார். இந்நிலையில் பழனி கிரிவலப் பாதையில் மரியா 'அரோகரா' கோஷத்துடன் பாட்டுப் பாடியும் நடனமாடிச் சென்று முருகனை வழிப்பட்டார். தற்போது மரியாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.