thumbnail

வேலூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சி.. முகமூடி அணிந்த நபர்களின் சிசிடிவி வீடியோ வைரல்! - VELLORE ATM THEFT VIDEO

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 9:21 PM IST

வேலூர்: ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டத்தின் குடிபாலா மண்டலம் பகுதியில் உள்ள வேலூர்-சித்தூர் சாலை, எம்பிடிஓ அலுவலகத்தின் அருகே தனியார் வங்கி ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை அந்த ஏடிஎம் உடைந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக குடிபாலா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் டிஎஸ்பி ராஜகோபால் ரெட்டி, மேற்கு ஆய்வாளர் ரவிசங்கர் ரெட்டி, எஸ்எஸ்ஐ நரேந்திரன் சன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். மேலும், அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 3 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த ரூ.25,98,400 பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.