thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 12:44 PM IST

ETV Bharat / Videos

தப்புத் தப்பாக மந்திரம் சொல்லி மது! முதியவரின் அட்ராசிட்டி - Old man drinking video

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் முதியவர் ஒருவர் மது அருந்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு முதியவர் மது அருந்தும் முன் குரு மந்திரம், சுப்ரமண்ய காயத்ரி போன்ற மந்திரங்களை தப்பும் தவறுமாக உளறுகிறார். பின்னர் தீர்த்தம் போலி பூமிக்கு சில துளிகளை தெளித்து விட்டு மது குடிக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் அருந்திய 115 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாத்தின் போது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கேள்விகள் எழுப்பிய நிலையில், அவையிலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் முதியவரின் மது அருந்தும் வீடியோ பேசு பொருளாகி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.