முதியவரை கம்பால் அடித்த ஆட்டோ ஓட்டுநர்.. வீடியோ வெளியாகி பரபரப்பு! - virudhunagar old man attack issue - VIRUDHUNAGAR OLD MAN ATTACK ISSUE
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-05-2024/640-480-21425038-thumbnail-16x9-oldman.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 9, 2024, 2:16 PM IST
விருதுநகர்: விருதுநகர் ரயில் நிலையம் முன்பு படுத்து கிடந்த வயதான முதியவரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கம்பால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் ரயில் நிலையம் முன்பு வயதான முதியவர் ஒருவர் படுத்து இருந்துள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அப்போது, அந்த ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வரும் விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், அந்த முதியவரை அங்கிருந்து செல்லுமாறு கம்பால் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த விருதுநகர் கூரைக்குண்டு பகுதியைச் சார்ந்த பழனியப்பன் (60) என்ற நபர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திரன் மீது மேற்கு காவல் நிலையத்தில் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் மற்றும் வீடியோவின் அடிப்படையில், மேற்கு காவல் நிலைய போலீசார் ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திரன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.