குன்னூர் பழக்கண்காட்சியில் பழங்களை ருசிக்க காத்திருக்கும் கரடி.. நோட்டமிடும் வனத்துறை! - Coonoor fruit show bear problem - COONOOR FRUIT SHOW BEAR PROBLEM
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-05-2024/640-480-21541558-thumbnail-16x9-bear.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 23, 2024, 9:04 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அடர்ந்த வனப்பகுதிகளால் சூழப்பட்ட இடமாகும். இங்குள்ள வனங்களில் சிறுத்தை, காட்டெருமை, கரடி, யானை உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி, இன்று சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தனியார் பங்களாவின் கழிவறைக்குள் சென்று ஓய்வு எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கரடியை பிடிப்பதற்காக வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்துள்ளனர். கூண்டில் கரடி சிக்காமல் இதுவரை போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் சிம்ஸ் பூங்காவில் நடைபெற உள்ள பழக் கண்காட்சிக்கு ஐந்து டன் பழங்களைக் கொண்டு சிற்பங்கள் மற்றும் நுழைவாயில் அமைக்கப்பட உள்ளது.
இதில் ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழம், மாதுளம் பழம், பலாப்பழம் உள்ளிட்ட பழ வகைகளால் சிற்பங்களும், பூங்காவின் நுழைவாயிலில் அமைக்கப்பட உள்ளது. எனவே, இந்தப் பழங்களை ருசி பார்க்க அந்த கரடி வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் கரடி வராதவாறு சிம்ஸ் பூங்காவைச் சுற்றி உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.