ETV Bharat / state

பவானிசாகர், பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி - Bhavanisagar Dam Water Level

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 1:47 PM IST

Bhavanisagar Dam Water Level:பவானிசாகர் மற்றும் பில்லூர் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் இரு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடல்போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை
கடல்போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதற்கிடையே நீலகிரி மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 622 கன அடியாக இருந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து 6 ஆயிரத்து 944 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 944 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் 60.07 அடியாகவும், நீர் இருப்பு 7.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பில்லூர் அணை நிலவரம்: அதே போல, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணை முழுகொள்ளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 14 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இன்று மாலை 14 ஆயிரம் கனஅடி நீர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பவானிசாகர் அணையில் தற்போது வண்டல் மண் எடுத்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து வருவதால் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. நீர்வரத்து வரும் போது நீர்வழிப்பாதையில் லாரி செல்லமுடியாத நிலை ஏற்படுவதால் மண் அள்ளுவதில் தடை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "மத்திய அரசால் இந்த வருடம் ரூ.12,000 கோடி கூடுதல் செலவு" - நிதித்துறை அதிர்ச்சி தகவல்! - TN Assembly Session 2024

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில மாதங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதற்கிடையே நீலகிரி மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 622 கன அடியாக இருந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து 6 ஆயிரத்து 944 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 944 கன அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் 60.07 அடியாகவும், நீர் இருப்பு 7.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பில்லூர் அணை நிலவரம்: அதே போல, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பில்லூர் அணை முழுகொள்ளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 14 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இன்று மாலை 14 ஆயிரம் கனஅடி நீர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பவானிசாகர் அணையில் தற்போது வண்டல் மண் எடுத்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து வருவதால் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. நீர்வரத்து வரும் போது நீர்வழிப்பாதையில் லாரி செல்லமுடியாத நிலை ஏற்படுவதால் மண் அள்ளுவதில் தடை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "மத்திய அரசால் இந்த வருடம் ரூ.12,000 கோடி கூடுதல் செலவு" - நிதித்துறை அதிர்ச்சி தகவல்! - TN Assembly Session 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.