ETV Bharat / state

"எப்போதும் உதயசூரியன் தான் தகதகவென்று ஜொலிக்கும்" - வடசென்னையில் ஏற்பட்ட சலசலப்பிற்குப் பின் அமைச்சர் சேகர் பாபு பேச்சு! - vadachennai dmk admk issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 7:03 PM IST

Vadachennai DMK - ADMK Nomination issue: தேர்தல் மனுத் தாக்கல் செய்ததில் முதலில் வென்றது உதயசூரியன் எனவும் தோல்வி பயத்தால் அராஜகங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள் அதிமுகவினர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

vadachennai dmk admk issue
vadachennai dmk admk issue

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சற்று சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் தமிழக முழுவதும் திமுக அதிமுக பாஜக வெளியிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த இருபதாம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் வருகின்ற 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்தனர். அப்போது கலாநிதி வீராசாமிக்கு 2ம் எண் டோக்கன் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் முதலில் வந்ததாகவும், கலாநிதி வீராசாமி தாமதமாக வந்த நிலையில், முதலில் கலாநிதி வீராசாமி வேட்பு மனு தாக்கல் செய்யத் தேர்தல் அலுவலர் அறைக்குச் சென்றதால் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இளைய அருணா, காவல்துறை பதிவேட்டில் 10 மணிக்கே பதிவு செய்திருந்தார். அந்த வகையில் முறையாக எங்களுடைய வரிசை எண் இரண்டு, அதிமுக வரிசை எண் 7. நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே சென்றவுடன், எங்களுடன் அவர்களும் உள்ளே வந்துவிட்டு எங்களுடைய வேட்பு மனுவைத் தான் முதலில் பெற வேண்டும், எங்களுடைய வேட்பாளர் முன்கூட்டியே வந்துவிட்டார் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

எங்கேயும் சட்ட விதிமீறல்கள் இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டதற்கு இணங்க, இந்த தேர்தலை அமைதியாகச் சந்திக்க வேண்டும், எங்கும் ஒரு சிறு அசம்பாவிதத்திற்கு இடமளிக்கக்கூடாது என்றும் நல்வழிகாட்டுதல்படி, நாங்கள் அமைதியாகத் தேர்தல் அலுவலரிடம் முறை கேட்டுக் கொண்டிருந்தோம்.

மேலும், அவதூறு பேச்சுகளை அதிமுகவினர் அந்த அறையில் பேசினர், யார் முன்பு வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலை வந்த பொழுது, அவர்களே திமுக தேர்தல் மனு தாக்கல் செய்த பிறகு நாங்கள் தாக்கல் செய்து கொள்கிறோம் என்று கூறிய பிறகும் கூட அங்கிருந்த சில அதிமுகவினர் நீங்கள் முதலில் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

முதலிலேயே கலாநிதி வீராச்சாமி அவர்களின் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயந்தி கலாநிதி அவர்கள் அதற்கு முன்பாகவே டோக்கன் பெற்று காலை 9:00 மணிக்கு இந்த பகுதிக்கு வருகை தந்திருந்ததால் அவரை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எப்படிச் சொன்னாலும் தேர்தல் மனு தாக்கல் செய்ததில் வென்றது உதயசூரியன் தான், தோல்வி பயத்தால் அராஜகங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள், எல்லாவற்றையும் சந்தித்து களத்தில் நின்று கடுமையான போராட்டங்களைச் சந்தித்த இயக்கம் திமுக. ஆட்சி அதிகாரம் இல்லாத நேரத்தில் கூட கொள்கைக்காகக் களத்தில் நின்ற இயக்கம் திமுக. எப்போதும் உதயசூரியன் தான் தகதகவென்று ஜொலிக்கும்.

அந்த வகையில் இன்றைய தினம் கூட உதயசூரியன் சின்னம் தான் முதலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது. தேர்தல் அதிகாரியை மிரட்ட வேண்டிய வேலை என்ன இருக்கிறது. பால் கனகராஜ் அந்த பகுதியில் இல்லவே இல்லை, கற்பனையாக ஜோடித்து பால்கனகராஜ் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார். ஆதாரம் இல்லாமல் இன்னும் 25 நாட்கள் உள்ளது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்.

திராவிட மாடல் ஆட்சியில் எந்தவித அச்சுறுத்தலும், யாருக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். திமுக நடந்து வந்த பாதை வேறு அதனால் அவர்கள் அவதூறை பேசுவார்கள் அதைப்பற்றி கவலையில்ல, எங்களைப் பொறுத்த வரையில் அந்த பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தோம்.

முதலில் உள்ளே சென்றதும் நாங்கள்தான் முதலில் இருக்கையில் அமர்ந்ததும் நாங்கள் தான் பின்னாலே தான் அவர்கள் வந்தார்கள். அவர்கள் இருக்கை இல்லை என்று சொன்ன பிறகு அவர்களுக்கும் இருக்கை போடப்பட்டது, டோக்கன் இரண்டாம் எண் டோக்கன் வாங்கியதும் திமுக தான்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, வடசென்னை தொகுதியில் போட்டியிடக் கலாநிதி வீராசாமி மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். சென்னை வடக்கு மண்டல துணை ஆணையரும், வடசென்னை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான கட்டா ரவி தேஜாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்.. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு! - Salem ADMK DMK Nomination

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சற்று சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் தமிழக முழுவதும் திமுக அதிமுக பாஜக வெளியிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த இருபதாம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் வருகின்ற 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்தனர். அப்போது கலாநிதி வீராசாமிக்கு 2ம் எண் டோக்கன் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் முதலில் வந்ததாகவும், கலாநிதி வீராசாமி தாமதமாக வந்த நிலையில், முதலில் கலாநிதி வீராசாமி வேட்பு மனு தாக்கல் செய்யத் தேர்தல் அலுவலர் அறைக்குச் சென்றதால் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இளைய அருணா, காவல்துறை பதிவேட்டில் 10 மணிக்கே பதிவு செய்திருந்தார். அந்த வகையில் முறையாக எங்களுடைய வரிசை எண் இரண்டு, அதிமுக வரிசை எண் 7. நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே சென்றவுடன், எங்களுடன் அவர்களும் உள்ளே வந்துவிட்டு எங்களுடைய வேட்பு மனுவைத் தான் முதலில் பெற வேண்டும், எங்களுடைய வேட்பாளர் முன்கூட்டியே வந்துவிட்டார் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

எங்கேயும் சட்ட விதிமீறல்கள் இருக்கக் கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டதற்கு இணங்க, இந்த தேர்தலை அமைதியாகச் சந்திக்க வேண்டும், எங்கும் ஒரு சிறு அசம்பாவிதத்திற்கு இடமளிக்கக்கூடாது என்றும் நல்வழிகாட்டுதல்படி, நாங்கள் அமைதியாகத் தேர்தல் அலுவலரிடம் முறை கேட்டுக் கொண்டிருந்தோம்.

மேலும், அவதூறு பேச்சுகளை அதிமுகவினர் அந்த அறையில் பேசினர், யார் முன்பு வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலை வந்த பொழுது, அவர்களே திமுக தேர்தல் மனு தாக்கல் செய்த பிறகு நாங்கள் தாக்கல் செய்து கொள்கிறோம் என்று கூறிய பிறகும் கூட அங்கிருந்த சில அதிமுகவினர் நீங்கள் முதலில் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

முதலிலேயே கலாநிதி வீராச்சாமி அவர்களின் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயந்தி கலாநிதி அவர்கள் அதற்கு முன்பாகவே டோக்கன் பெற்று காலை 9:00 மணிக்கு இந்த பகுதிக்கு வருகை தந்திருந்ததால் அவரை அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எப்படிச் சொன்னாலும் தேர்தல் மனு தாக்கல் செய்ததில் வென்றது உதயசூரியன் தான், தோல்வி பயத்தால் அராஜகங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள், எல்லாவற்றையும் சந்தித்து களத்தில் நின்று கடுமையான போராட்டங்களைச் சந்தித்த இயக்கம் திமுக. ஆட்சி அதிகாரம் இல்லாத நேரத்தில் கூட கொள்கைக்காகக் களத்தில் நின்ற இயக்கம் திமுக. எப்போதும் உதயசூரியன் தான் தகதகவென்று ஜொலிக்கும்.

அந்த வகையில் இன்றைய தினம் கூட உதயசூரியன் சின்னம் தான் முதலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது. தேர்தல் அதிகாரியை மிரட்ட வேண்டிய வேலை என்ன இருக்கிறது. பால் கனகராஜ் அந்த பகுதியில் இல்லவே இல்லை, கற்பனையாக ஜோடித்து பால்கனகராஜ் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார். ஆதாரம் இல்லாமல் இன்னும் 25 நாட்கள் உள்ளது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவார்.

திராவிட மாடல் ஆட்சியில் எந்தவித அச்சுறுத்தலும், யாருக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். திமுக நடந்து வந்த பாதை வேறு அதனால் அவர்கள் அவதூறை பேசுவார்கள் அதைப்பற்றி கவலையில்ல, எங்களைப் பொறுத்த வரையில் அந்த பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தோம்.

முதலில் உள்ளே சென்றதும் நாங்கள்தான் முதலில் இருக்கையில் அமர்ந்ததும் நாங்கள் தான் பின்னாலே தான் அவர்கள் வந்தார்கள். அவர்கள் இருக்கை இல்லை என்று சொன்ன பிறகு அவர்களுக்கும் இருக்கை போடப்பட்டது, டோக்கன் இரண்டாம் எண் டோக்கன் வாங்கியதும் திமுக தான்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, வடசென்னை தொகுதியில் போட்டியிடக் கலாநிதி வீராசாமி மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். சென்னை வடக்கு மண்டல துணை ஆணையரும், வடசென்னை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான கட்டா ரவி தேஜாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்.. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு! - Salem ADMK DMK Nomination

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.