ETV Bharat / state

தரங் சக்தி 2024; கோவை ராணுவ கண்காட்சி துவக்கம்.. பொதுமக்களுக்கு அனுமதி எப்போது? - KOVAI Tarang Shakti 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 4:19 PM IST

KOVAI Tarang Shakti 2024: கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நடைபெறும் 'தரங் சக்தி 2024' பன்னாட்டு கூட்டு விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக, இராணுவ தளவாடக் கண்காட்சியினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

ராணுவ கண்காட்சியை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என் ரவி
ராணுவ கண்காட்சியை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி (Credits- ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: சூலூர் இந்திய விமானப்படை தளத்தில் "தரங் சக்தி 2024" என்ற பெயரில் பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி கடந்த சனிக்கிழமை துவங்கியது. இரு கட்டங்களாக இந்த பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.

இந்த பயிற்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட பத்து நாடுகள் பங்கேற்றன. ஆகஸ்ட் 9ஆம் தேதி துவங்கிய இந்த கூட்டுப் பயிற்சியானது இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தரங் சக்தி பன்னாட்டு கூட்டு விமானப் போர் பயிற்சியின் ஒரு பகுதியாக, சூலூர் விமானப் படை வளாகத்தில் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சி இன்று (செவ்வாய்கிழமை) துவங்கியது.

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி இந்த கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் மொத்தம் 62 அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர், விமான உதிரிபாகங்கள், இராணுவ தளவாடங்கள், டிரோன்கள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் இக்கண்காட்சியினை ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவப் படையினர் பார்வையிட அனுமதிக்கின்றனர்.

விமான பயிற்சி நிறைவு நாளான ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்பட இருக்கின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டதை தொடர்ந்து, சூலூர் விமானப்படை வளாகத்தில் நடைபெற்ற பன்னாட்டு ராணுவ விமானங்களின் போர் பயிற்சி ஒத்திகைகளையும் அவர் பார்வையிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா இறுதி ஒத்திகை! - Independence Day Parade Rehearsal

கோயம்புத்தூர்: சூலூர் இந்திய விமானப்படை தளத்தில் "தரங் சக்தி 2024" என்ற பெயரில் பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி கடந்த சனிக்கிழமை துவங்கியது. இரு கட்டங்களாக இந்த பன்னாட்டு கூட்டு விமானப் படை போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.

இந்த பயிற்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட பத்து நாடுகள் பங்கேற்றன. ஆகஸ்ட் 9ஆம் தேதி துவங்கிய இந்த கூட்டுப் பயிற்சியானது இன்றுடன் நிறைவடைகிறது. இந்த தரங் சக்தி பன்னாட்டு கூட்டு விமானப் போர் பயிற்சியின் ஒரு பகுதியாக, சூலூர் விமானப் படை வளாகத்தில் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சி இன்று (செவ்வாய்கிழமை) துவங்கியது.

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி இந்த கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் மொத்தம் 62 அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர், விமான உதிரிபாகங்கள், இராணுவ தளவாடங்கள், டிரோன்கள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் இக்கண்காட்சியினை ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் மற்றும் ராணுவப் படையினர் பார்வையிட அனுமதிக்கின்றனர்.

விமான பயிற்சி நிறைவு நாளான ஆகஸ்ட் 15 அன்று பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்பட இருக்கின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டதை தொடர்ந்து, சூலூர் விமானப்படை வளாகத்தில் நடைபெற்ற பன்னாட்டு ராணுவ விமானங்களின் போர் பயிற்சி ஒத்திகைகளையும் அவர் பார்வையிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா இறுதி ஒத்திகை! - Independence Day Parade Rehearsal

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.