ETV Bharat / state

வயநாடு நிலச்சரிவில் தமிழர் உயிரிழப்பு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு! - Tamils Died in Wayanad Landslide

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 9:22 PM IST

Wayanad Landslide: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

MKS
நிலச்சரிவு மற்றும் ஸ்டாலின் (Credits - NDRF)

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், "நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (34) என்பவர் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது, இன்று (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை.. முக்கொம்பு வந்தடைந்த நீரை வரவேற்ற விவசாயிகள்! - mettur dam reaches full capacity

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், "நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (34) என்பவர் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது, இன்று (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை.. முக்கொம்பு வந்தடைந்த நீரை வரவேற்ற விவசாயிகள்! - mettur dam reaches full capacity

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.