ETV Bharat / state

"கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அலட்சியத்தால் ரூ.16 லட்சம் இழப்பு" - கரும்பு பயிர்களை தீ வைத்து எரித்த விவசாயி! - Tiruvannamalai sugarcane issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 1:25 PM IST

Tiruvannamalai sugarcane issue: திருவண்ணாமலையில் கரும்பை உரிய நேரத்தில் அறுவடை செய்யாமல் இருந்த சர்க்கரை ஆலையின் அலட்சியத்தால் தனக்கு ரூ.16 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள விவசாயி அருள் ஆனந்த், கரும்பு பயிர்களை தீ வைத்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரிக்கப்பட்ட கரும்பு பயிர்
எரிக்கப்பட்ட கரும்பு பயிர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சி நம்பியந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி அருள்ஆனந்த். இவருக்கு சொந்தமான நிலத்தில் 2021 ஆம் ஆண்டு கரும்பு நடவு செய்தார். கரும்பை 2022 ஆம் ஆண்டு அறுவடை செய்ய வேண்டிய நிலையில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து வைத்திருந்தார்.

அப்பொழுது அங்கு வந்து பார்த்த திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் கரும்பு நல்ல தரமாக உள்ளதால், இதை விதை பயிருக்கு பயன்படுத்தலாம் எனவே தற்போது அறுவடை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து 2023 ஆம் ஆண்டு தொடர் மழையின் பொழுது அறுவடை செய்ய உத்தரவு கொடுத்துள்ளனர்.

அப்பொழுது பெய்த தொடர்மழையால் கரும்பு பயிரில் வெள்ளம் சூழ்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது வரை கரும்பை ஆலை நிர்வாகம் அறுவடை செய்யவில்லை. மாற்று ஏற்பாடாக அருகே உள்ள பண்ணரி சர்க்கரை ஆலை சார்பில் அறுவடை செய்யும் வகையில் டைவர்ஷன் உத்தரவு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விவசாயி அருள் ஆனந்த் பலமுறை ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை வைத்தும் கரும்பு பயிர் அறுவடை செய்யப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி விவசாயி அருள் ஆனந்த் கரும்பு பயிரை தீ வைத்து எரித்துள்ளார். இதனால் தனக்கு நான்கு ஆண்டுகளில் ரூ.16 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

சாகுபடி செய்த கரும்பு பயிரை உரிய காலத்தில் அறுவடை செய்யாமல் அலட்சியப்போக்குடன் இயங்கிய ஆலை நிர்வாகமானது உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி அருள் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: பழனியில் யானைகளை விரட்ட நடவடிக்கை; விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சி நம்பியந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி அருள்ஆனந்த். இவருக்கு சொந்தமான நிலத்தில் 2021 ஆம் ஆண்டு கரும்பு நடவு செய்தார். கரும்பை 2022 ஆம் ஆண்டு அறுவடை செய்ய வேண்டிய நிலையில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்து வைத்திருந்தார்.

அப்பொழுது அங்கு வந்து பார்த்த திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் கரும்பு நல்ல தரமாக உள்ளதால், இதை விதை பயிருக்கு பயன்படுத்தலாம் எனவே தற்போது அறுவடை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து 2023 ஆம் ஆண்டு தொடர் மழையின் பொழுது அறுவடை செய்ய உத்தரவு கொடுத்துள்ளனர்.

அப்பொழுது பெய்த தொடர்மழையால் கரும்பு பயிரில் வெள்ளம் சூழ்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது வரை கரும்பை ஆலை நிர்வாகம் அறுவடை செய்யவில்லை. மாற்று ஏற்பாடாக அருகே உள்ள பண்ணரி சர்க்கரை ஆலை சார்பில் அறுவடை செய்யும் வகையில் டைவர்ஷன் உத்தரவு வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விவசாயி அருள் ஆனந்த் பலமுறை ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை வைத்தும் கரும்பு பயிர் அறுவடை செய்யப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி விவசாயி அருள் ஆனந்த் கரும்பு பயிரை தீ வைத்து எரித்துள்ளார். இதனால் தனக்கு நான்கு ஆண்டுகளில் ரூ.16 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார்.

சாகுபடி செய்த கரும்பு பயிரை உரிய காலத்தில் அறுவடை செய்யாமல் அலட்சியப்போக்குடன் இயங்கிய ஆலை நிர்வாகமானது உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி அருள் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: பழனியில் யானைகளை விரட்ட நடவடிக்கை; விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.