ETV Bharat / state

ஒரே நாள் இரவில் முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Theni Sothupparai dam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 12:24 PM IST

Theni Sothupparai dam: ஒரே நாள் இரவில் 11 அடி உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் வராக நதி கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சோத்துப்பாறை அணை
சோத்துப்பாறை அணை (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரத்திற்கும் பாசனத்திற்கும் மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணைகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 115.78 அடியாக இருந்தது.

இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து 6 கன அடியில் இருந்து 226 கன அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 8 மணி நேரத்தில் 11 அடி உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. அணைக்கு நீர்வரத்து 226 கன அடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வராக நதி கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் குடிநீர் ஆதாரத்திற்கும் பாசனத்திற்கும் மஞ்சளாறு மற்றும் சோத்துப்பாறை அணைகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் 115.78 அடியாக இருந்தது.

இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து 6 கன அடியில் இருந்து 226 கன அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 8 மணி நேரத்தில் 11 அடி உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. அணைக்கு நீர்வரத்து 226 கன அடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வராக நதி கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

join ETV Bharat whatsApp channel click here
join ETV Bharat whatsApp channel click here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணை குறித்து கேரளாவில் பரப்பப்படும் வுதந்தி; தேனியில் தமிழக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்! - TN Farmers Association protest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.