ETV Bharat / state

ஒரே சம்பவத்துக்காக சவுக்கு சங்கர் மீது 17 வழக்குகளா? காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி! - Savukku Shankar Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 6:52 PM IST

Savukku Shankar: யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட 17 வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா? என விளக்கமளிக்க காவல் துறைக்கு மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் , சென்னை உயர் நீதிமன்றம்
சவுக்கு சங்கர் , சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தனையார் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, யூ டியூபர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, சென்னை உள்ளிட்ட 16 காவல் நிலையங்களிலும், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஒவ்வொரு வழக்கின் விசாரணைக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் தன்னை அழைத்துச் செல்வதால் 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில், சில வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில், சில வழக்குகளில் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுவரை 10 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் அடுத்த வழக்குகளில் கைது செய்கின்றனர். அதனால், கைது செய்யப்படாத வழக்குகளில் கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவல் துறை தரப்பில், சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவம் தொடர்புடையதா? என்பதை சரி பார்க்க வேண்டியுள்ளதால், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா? என விளக்கமளிக்க காவல் துறைக்கு மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "எனக்கு அவரை புடிச்சிருக்கு".. பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!

சென்னை: தனையார் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, யூ டியூபர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, சென்னை உள்ளிட்ட 16 காவல் நிலையங்களிலும், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஒவ்வொரு வழக்கின் விசாரணைக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் தன்னை அழைத்துச் செல்வதால் 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில், சில வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில், சில வழக்குகளில் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுவரை 10 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் அடுத்த வழக்குகளில் கைது செய்கின்றனர். அதனால், கைது செய்யப்படாத வழக்குகளில் கைது செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவல் துறை தரப்பில், சவுக்கு சங்கருக்கு எதிராக பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவம் தொடர்புடையதா? என்பதை சரி பார்க்க வேண்டியுள்ளதால், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா? என விளக்கமளிக்க காவல் துறைக்கு மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "எனக்கு அவரை புடிச்சிருக்கு".. பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.