ETV Bharat / state

உதயநிதியின் 'ஏஞ்சல்' பட வழக்கு; அக்.28 இல் தீர்ப்பு!

தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினை அக்டோபர் 28ஆம் தேதி அறிவிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
உதயநிதி ஸ்டாலின் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் 'ஏஞ்சல்' என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஏஞ்சல் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதை அடுத்து, மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பை முடிக்க வேண்டியுள்ள சூழலில், 'ஏஞ்சல்' படத்தை நிறைவு செய்யாமல், உதயநிதி ஸ்டாலின் 'மாமன்னன்' படத்தில் நடித்தார்.

இதுமட்டும் அல்லாது, இன்னும் 'ஏஞ்சல்' படத்தின் 20 சதவீத படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், 'மாமன்னன்' படமே தனது கடைசி படம் என்றும் தெரிவித்துள்ளார். ஆகவே, ஏஞ்சல் படத்தின் மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும் எனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், இந்த வழக்கை நிராகரிக்க கோரி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: தீவுத் திடலில் கூட்டுறவு சங்கம் மூலம் பட்டாசு கடை.. டெண்டர் மற்றும் கடை வாடகை விவரம்!

அப்போது ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, "ஏஞ்சல் படத்திற்காக எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருவதால், இந்த படத்தின் உதவி இயக்குநர்கள் மற்றும் திரை கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.

அதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஏஞ்சல் படம் தொடர்பாக தயாரிப்பாளரை, உதயநிதி ஸ்டாலின் பலமுறை தொடர்பு கொண்டதாகவும், படத்தில் தனக்கான காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டதால் மாமன்னன் படத்தில் நடித்ததாகவும் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டீக்காராமன், தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினை அக்டோபர் 28ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் 'ஏஞ்சல்' என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஏஞ்சல் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதை அடுத்து, மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பை முடிக்க வேண்டியுள்ள சூழலில், 'ஏஞ்சல்' படத்தை நிறைவு செய்யாமல், உதயநிதி ஸ்டாலின் 'மாமன்னன்' படத்தில் நடித்தார்.

இதுமட்டும் அல்லாது, இன்னும் 'ஏஞ்சல்' படத்தின் 20 சதவீத படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், 'மாமன்னன்' படமே தனது கடைசி படம் என்றும் தெரிவித்துள்ளார். ஆகவே, ஏஞ்சல் படத்தின் மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும் எனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், இந்த வழக்கை நிராகரிக்க கோரி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: தீவுத் திடலில் கூட்டுறவு சங்கம் மூலம் பட்டாசு கடை.. டெண்டர் மற்றும் கடை வாடகை விவரம்!

அப்போது ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, "ஏஞ்சல் படத்திற்காக எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருவதால், இந்த படத்தின் உதவி இயக்குநர்கள் மற்றும் திரை கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.

அதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஏஞ்சல் படம் தொடர்பாக தயாரிப்பாளரை, உதயநிதி ஸ்டாலின் பலமுறை தொடர்பு கொண்டதாகவும், படத்தில் தனக்கான காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டதால் மாமன்னன் படத்தில் நடித்ததாகவும் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டீக்காராமன், தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினை அக்டோபர் 28ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.