சென்னைக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால், பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு விமானங்கள் வெளியூர்களில் இருந்து வருகை தருவது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மழை நிலவரம்: இதுவரை எங்கும் மின்வெட்டு இல்லை - துணை முதலமைச்சர் தகவல்!
Published : 2 hours ago
|Updated : 4 minutes ago
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைவதால், அக்டோபர் 16ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது.
LIVE FEED
சென்னை விமானங்கள் ரத்து?
துணை முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு; இரண்டு சுரங்கப்பாதைகள் மூடல்!
தமிழ்நாட்டில் தீவிர மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் என்ன என்பதை கீழ்வருமாறு காணலாம்.
- இதுவரை 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில், 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
- சென்னை கணேசபுரம் மற்றும் பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
- 300 இடங்களில் நீர் வெளியேற்றும் பணிகள் நடந்துவருகிறது.
- கடந்த 24 மணிநேரததில் எங்கும் மின்வெட்டு ஏற்படவில்லை.
- தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர்.
- சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் களத்தில் உள்ளனர்.
- ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை அனுமதிக்கும்படி அறிவுறுத்தப்படும்.
- தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்களைக் கொண்டு 26 பணி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- சென்னையில் 89 படங்குகளும், பிற மாவட்டங்களில் 130 படகுகளும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளன.
- சென்னையைச் சுற்றிலும் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது.
- சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் சேவையளிக்க தயாராக உள்ளன.
- சென்னையில் 15 ஐஏஎஸ் அலுவலர்கள் வெள்ளத்தைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில், @chennaicorp ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு அறையில் இன்றைய ஆய்வு மேற்கொண்டோம்.
— Udhay (@Udhaystalin) October 15, 2024
கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய அழைப்புகள் – மழை பெய்து வருவது தொடர்பான பதிவுகள் - நீர்நிலைகளின் தற்போதைய நிலை - பொதுமக்களின்… pic.twitter.com/JRtaaNton1
சுரங்கப்பாதையில் 3 அடி வெள்ளம்?
பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் சுமார் மூன்றடி அளவிற்கு வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மண்டல மின் வாரிய அலுவலர்கள் தொடர்பு எண்கள் வெளியீடு!
சென்னை நகரில் மழை நேரங்களில் மின்சார பிரச்சினைகள் இருந்தால், அலுவலர்களைத் தொடர்புகொள்ளும் வகையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
-
மின்வாரிய தொடர்பு அலுவலர்கள் ☎️#சென்னை நகரின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்பு. மின்சாரம், பாதுகாப்பு மற்றும் சேவைகளை நிறைவேற்றிட ஒன்றிணைந்து செயல் படுவோம்! #TANGEDCO #TNPDCLMonsoon#TNPDCLNodal officers #TeamCoordination#TNEB | #NorthEastMonsoon | #ChennaiRains pic.twitter.com/JPkT652C9C
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) October 15, 2024
ஆன்லைன் வகுப்புகளும் வேண்டாம்!
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
-
Considering the monsoon situation at TN, I request the concern ROs and board officers to kindly call off the scheduled online classes for students. As they may face technical and other issues.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) October 15, 2024
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில்
மாணவர்களுக்கான இணையவழி…
பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் மழை வெள்ளம்!
சென்னை நகர் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளின் நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் மட்டும் நீர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த இரண்டு தினங்களுக்கு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேளச்சேரி மேம்பாலத்தில் தஞ்சமடைந்த கார்கள்!
வேளச்சேரி மேம்பாலத்தில் இரண்டாவது நாளாக கார்கள் அணுவகுத்து நிற்கின்றன. பொதுமக்கள் மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திச் சென்றுள்ளனர். இதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைவதால், அக்டோபர் 16ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது.
LIVE FEED
சென்னை விமானங்கள் ரத்து?
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால், பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு விமானங்கள் வெளியூர்களில் இருந்து வருகை தருவது என்பது குறிப்பிடத்தக்கது.
துணை முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு; இரண்டு சுரங்கப்பாதைகள் மூடல்!
தமிழ்நாட்டில் தீவிர மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் என்ன என்பதை கீழ்வருமாறு காணலாம்.
- இதுவரை 1,500 அழைப்புகள் வந்துள்ளன. அதில், 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
- சென்னை கணேசபுரம் மற்றும் பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது.
- 300 இடங்களில் நீர் வெளியேற்றும் பணிகள் நடந்துவருகிறது.
- கடந்த 24 மணிநேரததில் எங்கும் மின்வெட்டு ஏற்படவில்லை.
- தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர்.
- சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் களத்தில் உள்ளனர்.
- ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை அனுமதிக்கும்படி அறிவுறுத்தப்படும்.
- தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுக்களைக் கொண்டு 26 பணி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- சென்னையில் 89 படங்குகளும், பிற மாவட்டங்களில் 130 படகுகளும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளன.
- சென்னையைச் சுற்றிலும் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது.
- சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் சேவையளிக்க தயாராக உள்ளன.
- சென்னையில் 15 ஐஏஎஸ் அலுவலர்கள் வெள்ளத்தைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில், @chennaicorp ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு அறையில் இன்றைய ஆய்வு மேற்கொண்டோம்.
— Udhay (@Udhaystalin) October 15, 2024
கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய அழைப்புகள் – மழை பெய்து வருவது தொடர்பான பதிவுகள் - நீர்நிலைகளின் தற்போதைய நிலை - பொதுமக்களின்… pic.twitter.com/JRtaaNton1
சுரங்கப்பாதையில் 3 அடி வெள்ளம்?
பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் சுமார் மூன்றடி அளவிற்கு வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மண்டல மின் வாரிய அலுவலர்கள் தொடர்பு எண்கள் வெளியீடு!
சென்னை நகரில் மழை நேரங்களில் மின்சார பிரச்சினைகள் இருந்தால், அலுவலர்களைத் தொடர்புகொள்ளும் வகையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
-
மின்வாரிய தொடர்பு அலுவலர்கள் ☎️#சென்னை நகரின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நியமிக்கப்பு. மின்சாரம், பாதுகாப்பு மற்றும் சேவைகளை நிறைவேற்றிட ஒன்றிணைந்து செயல் படுவோம்! #TANGEDCO #TNPDCLMonsoon#TNPDCLNodal officers #TeamCoordination#TNEB | #NorthEastMonsoon | #ChennaiRains pic.twitter.com/JPkT652C9C
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) October 15, 2024
ஆன்லைன் வகுப்புகளும் வேண்டாம்!
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.
-
Considering the monsoon situation at TN, I request the concern ROs and board officers to kindly call off the scheduled online classes for students. As they may face technical and other issues.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) October 15, 2024
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில்
மாணவர்களுக்கான இணையவழி…
பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் மழை வெள்ளம்!
சென்னை நகர் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளின் நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் மட்டும் நீர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த இரண்டு தினங்களுக்கு நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேளச்சேரி மேம்பாலத்தில் தஞ்சமடைந்த கார்கள்!
வேளச்சேரி மேம்பாலத்தில் இரண்டாவது நாளாக கார்கள் அணுவகுத்து நிற்கின்றன. பொதுமக்கள் மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திச் சென்றுள்ளனர். இதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.