ETV Bharat / state

"தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் படிப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியும்" - மாணவர்கள் கருத்து! - Tamil Pudhalvan Scheme

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 9:41 PM IST

Tamil Pudhalvan Scheme: தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம்தோறும் கிடைக்கும் உதவித் தாெகையால் படிப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும் எனவும், படிப்பில் நன்றாக கவனம் செலுத்த முடியும் எனவும் உதவித்தொகை பெற்ற மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்ப் புதல்வன் திட்டம்
தமிழ்ப் புதல்வன் திட்டம் (Credits - sekar babu X Page, ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்ததை தொடர்ந்து, இத்திட்டத்தினை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கூட்டரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னையில் முதற்கட்டமாக 135 கல்லூரிகளில் 10,304 மாணவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக இத்திட்டத்தின் மூலம் ரூ.1000 பற்று வைக்கப்பட்டுள்ளது.

மாணவரகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படித்து கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் சார்ந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தினால் தொழில் கல்வி பயிலும் மாணவர்களும் பயன்பெறலாம். அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்தாண்டுகளில் சேர்ந்திருந்தாலும், அவர்கள் படிக்கும் நடப்பாண்டு முதல் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்புதல்வன் திட்டத்தில் உதவித் தொகையை பெற்ற மாணவர்கள் கூறும்போது, "தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியால் எங்களுக்கு தேவையான நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வாங்க முடியும். எங்களின் குடும்பம் ஏழ்மையில் உள்ள நிலையில் பெற்றோர்களிடம் நிதி கேட்காமல் படிப்பு செலவை பார்த்துக் கொள்ள முடியும். கல்வியில் தொடர்ந்து ஆர்வமாக கற்க முடியும்" என தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்கம்.. உடனடியாக மாணவர்கள் வங்கிக் கணக்கில் வந்த ரூ.1000 - Tamil Pudhalvan Scheme

சென்னை: தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்ததை தொடர்ந்து, இத்திட்டத்தினை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கூட்டரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னையில் முதற்கட்டமாக 135 கல்லூரிகளில் 10,304 மாணவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக இத்திட்டத்தின் மூலம் ரூ.1000 பற்று வைக்கப்பட்டுள்ளது.

மாணவரகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படித்து கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் சார்ந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தினால் தொழில் கல்வி பயிலும் மாணவர்களும் பயன்பெறலாம். அரசுப் பள்ளி மாணவர்கள் கடந்தாண்டுகளில் சேர்ந்திருந்தாலும், அவர்கள் படிக்கும் நடப்பாண்டு முதல் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்புதல்வன் திட்டத்தில் உதவித் தொகையை பெற்ற மாணவர்கள் கூறும்போது, "தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதியால் எங்களுக்கு தேவையான நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வாங்க முடியும். எங்களின் குடும்பம் ஏழ்மையில் உள்ள நிலையில் பெற்றோர்களிடம் நிதி கேட்காமல் படிப்பு செலவை பார்த்துக் கொள்ள முடியும். கல்வியில் தொடர்ந்து ஆர்வமாக கற்க முடியும்" என தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்கம்.. உடனடியாக மாணவர்கள் வங்கிக் கணக்கில் வந்த ரூ.1000 - Tamil Pudhalvan Scheme

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.