ETV Bharat / state

கோயில் விழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சி; நடவடிக்கை எடுக்க கோரி நடிகர்கள் வேடத்தில் மனு அளித்த கலைஞர்கள்! - Stage artists petition

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 7:52 PM IST

Stage artists petition: கோவையில் மேடை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாசமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மறைந்த நடிகர்களை போல் வேடம் அணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேடை நடனக் கலைஞர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

மனு அளிக்க வந்த மேடை கலைஞர்கள்
மனு அளிக்க வந்த மேடை கலைஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மேடைக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதேசமயம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மறைந்த நடிகர்கள் வேடத்தில் மனு அளிக்க வந்த மேடை கலைஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நடக்கும் ஒரு சில பொது நிகழ்வுகளில், சிலர் ஆபாச நடன நிகழ்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாடு எழுந்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட மேடை நடனக் கலைஞர் சங்கத்தினர் இன்று (புதன்கிழமை) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அப்போது எம்ஜிஆர், விஜயகாந்த், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட மறைந்த நடிகர்களை போல் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த அவர்கள் மனு அளித்தனர். மேலும், தங்கள் துறைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிலர், மேடை கலைஞர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், கலாச்சார சீர்கேடு ஏற்படும் வகையிலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நிகழ்ச்சிகளை நடத்துவதாக அவர்கள்குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து எம்ஜிஆர் போல் வேடம் அணிந்து வந்த கலைஞர் கூறுகையில், "கலாச்சார பாரம்பரியமிக்க கோவையில், அதன் நற்பெயரை கெடுக்கும் விதமாக வெளி மாநிலங்களில் இருந்து நடனக்கலைஞர்களை அழைத்து வந்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

இதனால், இங்கு இருக்கும் மற்ற கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு அனுமதி அளிக்கும் காவல்துறை எங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பதில்லை. தரங்கெட்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவருடைய பாணியிலேயே பேசினார்.

மேலும் நடிகர் எம்.ஆர்.ராதா வேடத்தில் இருந்த மற்றொரு கலைஞர், "கோவை மாவட்டத்தில் கோயில் நிகழ்ச்சிகளில் சிலர் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். ஆனால் நல்ல முறையில் நிகழ்ச்சிகள் நடத்துப்பவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. நல்ல கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று எம்.ஆர்.ராதா குரலிலேயே கூறினார்.

கோயில் நிகழ்ச்சிகளில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தும், கோவையில் சில இடங்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடப்பதாக மேடை கலைஞர்கள் குற்றம்சாட்டி உள்ளதும், இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரை சைபர் கிரைமில் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லையா? தென்மண்டல காவல்துறைக்கு முக்கிய உத்தரவு!

கோயம்புத்தூர்: கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மேடைக்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதேசமயம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மறைந்த நடிகர்கள் வேடத்தில் மனு அளிக்க வந்த மேடை கலைஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நடக்கும் ஒரு சில பொது நிகழ்வுகளில், சிலர் ஆபாச நடன நிகழ்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாடு எழுந்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட மேடை நடனக் கலைஞர் சங்கத்தினர் இன்று (புதன்கிழமை) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அப்போது எம்ஜிஆர், விஜயகாந்த், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட மறைந்த நடிகர்களை போல் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த அவர்கள் மனு அளித்தனர். மேலும், தங்கள் துறைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிலர், மேடை கலைஞர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், கலாச்சார சீர்கேடு ஏற்படும் வகையிலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நிகழ்ச்சிகளை நடத்துவதாக அவர்கள்குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து எம்ஜிஆர் போல் வேடம் அணிந்து வந்த கலைஞர் கூறுகையில், "கலாச்சார பாரம்பரியமிக்க கோவையில், அதன் நற்பெயரை கெடுக்கும் விதமாக வெளி மாநிலங்களில் இருந்து நடனக்கலைஞர்களை அழைத்து வந்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

இதனால், இங்கு இருக்கும் மற்ற கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு அனுமதி அளிக்கும் காவல்துறை எங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பதில்லை. தரங்கெட்ட நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவருடைய பாணியிலேயே பேசினார்.

மேலும் நடிகர் எம்.ஆர்.ராதா வேடத்தில் இருந்த மற்றொரு கலைஞர், "கோவை மாவட்டத்தில் கோயில் நிகழ்ச்சிகளில் சிலர் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். ஆனால் நல்ல முறையில் நிகழ்ச்சிகள் நடத்துப்பவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. நல்ல கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று எம்.ஆர்.ராதா குரலிலேயே கூறினார்.

கோயில் நிகழ்ச்சிகளில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தும், கோவையில் சில இடங்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடப்பதாக மேடை கலைஞர்கள் குற்றம்சாட்டி உள்ளதும், இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரை சைபர் கிரைமில் போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லையா? தென்மண்டல காவல்துறைக்கு முக்கிய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.