ETV Bharat / state

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு! - Appavu Defamation Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 9:21 PM IST

Speaker Appavu : தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கில், வரும் செப்.13ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை : சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சபாநாயகருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததையடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

பின்னர் இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கின் விசாரணையை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, அப்பாவு தரப்பில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் பாபு முருகவேல் சார்பில், நேரில் ஆஜராகாத அப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சபாநாயகர் அப்பாவு செப்டம்பர் 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது

சென்னை : சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சபாநாயகருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததையடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

பின்னர் இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கின் விசாரணையை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, அப்பாவு தரப்பில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் பாபு முருகவேல் சார்பில், நேரில் ஆஜராகாத அப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சபாநாயகர் அப்பாவு செப்டம்பர் 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.