ETV Bharat / state

சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்! - son killed his father for property

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 3:12 PM IST

Son Killed His Father For Property: ராமநாதபுரம் மாவட்டத்தில் சொத்தை தர மறுத்த காரணத்தால், மகனே தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையம் (கோப்புப்படம்)
ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையம் (கோப்புப்படம்) (Credit - Etv Bharat Tamil Nadu)

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள பெருமாள்மடை கிராமத்தில் வசித்து வருபவர் 85 வயதான முதியவர் உலகன். இவருடைய மகன் மணிமாறன் அப்பகுதியில் ரவுடியாக உள்ளதாகவும், இவர் மீது ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிமாறன் அடிக்கடி தனது தந்தை உலகனிடம் பூர்வீகச் சொத்துக்களை எழுதித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், மதுபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்தல், சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டி முதியவர் எழுதிக் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை அரிவாளால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த முதியவர் உலகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருவாடானை டிஎஸ்பி நிரேஷ்பழனிவேல், முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்த ஆர்.எஸ்.மங்கலம் போலீசார், தப்பியோடிய மணிமாறனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெருங்களத்தூரில் இரட்டைக் கொலை.. கழுத்தறுத்து சுடுகாட்டில் வீசிய கொடூரம்..! அதிர்ச்சி பின்னணி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள பெருமாள்மடை கிராமத்தில் வசித்து வருபவர் 85 வயதான முதியவர் உலகன். இவருடைய மகன் மணிமாறன் அப்பகுதியில் ரவுடியாக உள்ளதாகவும், இவர் மீது ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிமாறன் அடிக்கடி தனது தந்தை உலகனிடம் பூர்வீகச் சொத்துக்களை எழுதித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், மதுபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்தல், சொத்துக்களைக் காப்பாற்ற வேண்டி முதியவர் எழுதிக் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு, வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தந்தையை அரிவாளால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த முதியவர் உலகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருவாடானை டிஎஸ்பி நிரேஷ்பழனிவேல், முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்த ஆர்.எஸ்.மங்கலம் போலீசார், தப்பியோடிய மணிமாறனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெருங்களத்தூரில் இரட்டைக் கொலை.. கழுத்தறுத்து சுடுகாட்டில் வீசிய கொடூரம்..! அதிர்ச்சி பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.