ETV Bharat / state

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி; 54-வது முறையாக நீதிமன்ற காவல் நீடிப்பு! - SENTHIL BALAJI CASE UPDATE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 6:41 PM IST

SENTHIL BALAJI CASE UPDATE: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி
நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த குற்றச்சாட்டுக்கள் பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை இன்று (ஆகஸ்ட் 8) ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டார்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, குளுகோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட ஊசி பொருத்திய கையுடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக அமலாக்கத் துறை சாட்சிய குற்றச்சாட்டுக்களை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின் தமிழிலும் படித்து காட்டி, குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: யூடியூபர் பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது.. காரணம் என்ன?

இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “தான் நிரபராதி எனவும், தனக்கு எதிரான இந்த வழக்கு, புனையப்பட்ட வழக்கு எனவும் தெரிவித்தார். மேலும், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை.இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும், தான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு: இதையடுத்து, சாட்சிகள் விசாரணைக்காக வழக்கை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 54-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மாமூல் கேட்டு மிரட்டிய அஸ்வத்தாமன்..தட்டிக்கேட்ட ஆம்ஸ்ட்ராங்-க்கு ஸ்கெட்ச்? கொலைக்கான பின்னணி என்ன!

சென்னை: சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த குற்றச்சாட்டுக்கள் பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை இன்று (ஆகஸ்ட் 8) ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டார்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, குளுகோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட ஊசி பொருத்திய கையுடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக அமலாக்கத் துறை சாட்சிய குற்றச்சாட்டுக்களை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின் தமிழிலும் படித்து காட்டி, குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: யூடியூபர் பிரியாணி மேன் மேலும் ஒரு வழக்கில் கைது.. காரணம் என்ன?

இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “தான் நிரபராதி எனவும், தனக்கு எதிரான இந்த வழக்கு, புனையப்பட்ட வழக்கு எனவும் தெரிவித்தார். மேலும், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை.இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும், தான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு: இதையடுத்து, சாட்சிகள் விசாரணைக்காக வழக்கை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 54-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மாமூல் கேட்டு மிரட்டிய அஸ்வத்தாமன்..தட்டிக்கேட்ட ஆம்ஸ்ட்ராங்-க்கு ஸ்கெட்ச்? கொலைக்கான பின்னணி என்ன!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.