ETV Bharat / state

"வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியான வீடியோ பதிவு: சத்யபிரதா சாகு! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 5:28 PM IST

lok sabha election 2024: லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி கானொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

சத்யபிரதா சாகு புகைப்படம்
சத்யபிரதா சாகு புகைப்படம் (credits -ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு நடைபெறும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது வரை 6 கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில், இறுதியான 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், தேர்தல் முடிவுற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், வாக்குப்பதிவு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரத சாகு, "தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 43 கட்டடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. பொதுவாக ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும்.

வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மேஜைகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அமைக்கப்படும். குறிப்பாக, அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பணிகளுக்காக 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட மையங்களில் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மேஜையிலும் எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும். இதுதவிர, சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை மையங்களில் குலுக்கல் முறையில் பணி: சென்னை தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்! - Lok Sabha Election 2024

சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு நடைபெறும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது வரை 6 கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில், இறுதியான 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், தேர்தல் முடிவுற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், வாக்குப்பதிவு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரத சாகு, "தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 43 கட்டடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. பொதுவாக ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும்.

வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மேஜைகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அமைக்கப்படும். குறிப்பாக, அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பணிகளுக்காக 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட மையங்களில் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மேஜையிலும் எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும். இதுதவிர, சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை மையங்களில் குலுக்கல் முறையில் பணி: சென்னை தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.