ETV Bharat / state

"கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு": அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு! - Salary hike for co op workers

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 10:46 PM IST

பால்வளத்துறையில் விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் என்றும், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Minister Mano Thangaraj (ETV Bharat)

சென்னை: பால்வளத்துறையில் விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் என்றும், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர், ஆவின் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், பால் வளத்துறையில் உள்ள விதிகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் போன்றவற்றில் சிறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறிய அவர், பால்வளத்தை அதிகமாக கொள்முதல் செய்தால் எப்படி கையாள்வீர்கள் என்று கேட்பதாகவும் கூறினார். தற்போது 18 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் எனவும் உறுதியளித்தார்.

அதேபோல், பால் உற்பத்தியை மேலும் பெருக்க முடியும் என உத்தரவாதம் அளிப்பதாக கூறிய அவர், மாநிலத்தில் பாலின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அகவிலைப்படி உயர்வை 42 விழுக்காட்டில் இருந்து 46 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், பால் பண்ணை தொழிலில் தொழில் முனைவோராக விரும்பும் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் முதல் முறை தொழில் தொடங்குவோர் ஆகியோருக்கு தேவைப்படும் தகுந்த தொழிற்பயிற்சி, ஆதார நிதி உதவி, வழங்கிட பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையங்கள் தமிழ்நாட்டில் இரு இடங்களில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

இவ்வாறு தோற்றுவிக்கப்படும் பால்பண்ணை தொழில் வளர்ச்சி மையங்களில் கால்நடை வளர்ப்பு, பசுந்தீவன உற்பத்தி, பால் பண்ணை தொழிலை திறம்பட கையாளுவதற்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் இந்த இரு மையங்கள் ஒன்றியங்களில் சொந்த நிதியின் மூலம் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் நிறுவப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் 2024-25 ஆம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கேன்கள், பால் அளவை உபகரணங்கள், பதிவேடுகள் மற்றும் பாப் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் எனவும் பசுந்தீவன பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு 1 கோடி செலவில் பசுந்தீவன புல் கரணைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உத்திரவாதம் அளித்துள்ளார்.

பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டசத்து டானிக் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கணவனை இழந்த பெண்கள் முதல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வரை: கால்நடை பராமரிப்புத்துறையின் புதிய அறிவிப்புகள்.! - 11 New Updates in Animal Husbandry

சென்னை: பால்வளத்துறையில் விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் என்றும், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர், ஆவின் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், பால் வளத்துறையில் உள்ள விதிகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் போன்றவற்றில் சிறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறிய அவர், பால்வளத்தை அதிகமாக கொள்முதல் செய்தால் எப்படி கையாள்வீர்கள் என்று கேட்பதாகவும் கூறினார். தற்போது 18 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் எனவும் உறுதியளித்தார்.

அதேபோல், பால் உற்பத்தியை மேலும் பெருக்க முடியும் என உத்தரவாதம் அளிப்பதாக கூறிய அவர், மாநிலத்தில் பாலின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அகவிலைப்படி உயர்வை 42 விழுக்காட்டில் இருந்து 46 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார்.

மேலும், பால் பண்ணை தொழிலில் தொழில் முனைவோராக விரும்பும் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் முதல் முறை தொழில் தொடங்குவோர் ஆகியோருக்கு தேவைப்படும் தகுந்த தொழிற்பயிற்சி, ஆதார நிதி உதவி, வழங்கிட பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையங்கள் தமிழ்நாட்டில் இரு இடங்களில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

இவ்வாறு தோற்றுவிக்கப்படும் பால்பண்ணை தொழில் வளர்ச்சி மையங்களில் கால்நடை வளர்ப்பு, பசுந்தீவன உற்பத்தி, பால் பண்ணை தொழிலை திறம்பட கையாளுவதற்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் இந்த இரு மையங்கள் ஒன்றியங்களில் சொந்த நிதியின் மூலம் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் நிறுவப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் 2024-25 ஆம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கேன்கள், பால் அளவை உபகரணங்கள், பதிவேடுகள் மற்றும் பாப் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் எனவும் பசுந்தீவன பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு 1 கோடி செலவில் பசுந்தீவன புல் கரணைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உத்திரவாதம் அளித்துள்ளார்.

பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டசத்து டானிக் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கணவனை இழந்த பெண்கள் முதல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வரை: கால்நடை பராமரிப்புத்துறையின் புதிய அறிவிப்புகள்.! - 11 New Updates in Animal Husbandry

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.