ETV Bharat / state

ஓசூரில் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.14.5 லட்சம் கைவரிசை.. அரங்கேறும் தொடர் கொள்ளையால் திணறும் போலீசார்! - Hosur ATM Robbery

Hosur ATM Robbery: ஓசூரில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் எந்திரத்தை வெல்டிங் மூலம் உடைத்து, அதிலிருந்து ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 11:15 AM IST

ஏடிஎம் மற்றும் கொள்ளை தொடர்பாக புகைப்படம்
ஏடிஎம் மற்றும் கொள்ளை தொடர்பாக புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கிருஷ்ணகிரி: ஓசூர் - பாகலூர் தேசிய நெடுஞ்சாலை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில், ஐடிபிஐ (IDBI) என்ற தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லதா நிலையில், ஏடிஎம்-மின் முன்பக்க ஷட்டர் நேற்று முழுவதும் மூடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாலையில் வழக்கம்போல் அதனை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர் சிவா, ஷட்டரை திறந்து பார்த்த போது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவா, இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் விவேகானந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில், வங்கியின் மேலாளர் வந்து பார்த்த போது, ஏடிஎம் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், இது தொடர்பாக, வங்கி மேலாளர் ஹட்கோ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையிலான போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியுடன், விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மேலும், அந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அதிகாலை நேரத்தில் வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து, ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங்கை வைத்து உடைத்து, அதிலிருந்து ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது பதிவாகியுள்ளது.

இதேபோல, கடந்த வாரம் ஆவலப்பள்ளி சாலை பஸ்தி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த சமயத்தில் ஏடிஎம் காவலாளி திடீரென அங்கு வந்ததால் தப்பியோடியதாகவும், இதனால், அந்த ஏடிஎம்மில் உள்ள பணம் தப்பியதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இதேபோல கர்நாடக மாநிலம், ஆந்திர மாநிலம் எனப் பல பகுதியில் ஒரே மாதிரியான ஏடிஎம் கொள்ளை அரங்கேறியுள்ளதாகவும், மேலும், நடந்த 5 சம்பவம் இடங்களில் கிடைத்த கைரேகை ஒத்துப்போவதால், ஒரு கும்பல் தான் அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டியுள்ளது எனவும், அவர்களைப் பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மது பாட்டிலில் செத்துக்கிடந்த பல்லியால் உடல் நலக்குறைவு? மதுப்பிரியர் போலீசில் புகார்!

கிருஷ்ணகிரி: ஓசூர் - பாகலூர் தேசிய நெடுஞ்சாலை என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில், ஐடிபிஐ (IDBI) என்ற தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லதா நிலையில், ஏடிஎம்-மின் முன்பக்க ஷட்டர் நேற்று முழுவதும் மூடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாலையில் வழக்கம்போல் அதனை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர் சிவா, ஷட்டரை திறந்து பார்த்த போது, ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவா, இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் விவேகானந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில், வங்கியின் மேலாளர் வந்து பார்த்த போது, ஏடிஎம் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், இது தொடர்பாக, வங்கி மேலாளர் ஹட்கோ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையிலான போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியுடன், விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மேலும், அந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, அதிகாலை நேரத்தில் வந்த மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்து, ஏடிஎம் எந்திரத்தை கேஸ் வெல்டிங்கை வைத்து உடைத்து, அதிலிருந்து ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது பதிவாகியுள்ளது.

இதேபோல, கடந்த வாரம் ஆவலப்பள்ளி சாலை பஸ்தி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த சமயத்தில் ஏடிஎம் காவலாளி திடீரென அங்கு வந்ததால் தப்பியோடியதாகவும், இதனால், அந்த ஏடிஎம்மில் உள்ள பணம் தப்பியதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இதேபோல கர்நாடக மாநிலம், ஆந்திர மாநிலம் எனப் பல பகுதியில் ஒரே மாதிரியான ஏடிஎம் கொள்ளை அரங்கேறியுள்ளதாகவும், மேலும், நடந்த 5 சம்பவம் இடங்களில் கிடைத்த கைரேகை ஒத்துப்போவதால், ஒரு கும்பல் தான் அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டியுள்ளது எனவும், அவர்களைப் பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மது பாட்டிலில் செத்துக்கிடந்த பல்லியால் உடல் நலக்குறைவு? மதுப்பிரியர் போலீசில் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.