ETV Bharat / state

ஓபிஎஸ் தொகுதியில் முடங்கிக் கிடக்கும் சமுதாயக்கூடம்.. பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தல்! - Kodangipatti Community hall Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 3:32 PM IST

Kodangipatti Community hall Issue: தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், குப்பை கூடாரமாக மாறி நோய் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், அதனை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடாங்கிபட்டி சமுதாய கூடம்
கோடாங்கிபட்டி சமுதாயக் கூடம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது கோடாங்கிபட்டி ஊராட்சி. இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு சமுதாயக் கூட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. ஏழை எளிய மக்கள் தங்கள் திருமண நிகழ்வுகள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் நடத்திடும் வகையில் இந்த சமுதாய மண்டபம் கட்டப்பட்டது.

பொதுமக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஊராட்சி நிர்வாகத்திடம் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த சமுதாய மண்டபம், கட்டப்பட்டதில் இருந்து ஒரு நாள் கூட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக இந்த மண்டபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடத்த ஊராட்சி நிர்வாகமும் முன் வரவில்லை என்றும், கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இன்றி இருக்கின்ற இந்த மண்டபம் குப்பைக் கழிவுகளை கொட்டும் இடமாகவும், மது பிரியர்களின் கூடாரமாகவும் மாறி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாடு இன்றி இருக்கும் மண்டபம் குப்பைக் கிடங்கால் சூழ்ந்துள்ளதால், அசுத்தம் ஏற்பட்டு நோய்வாய்ப்படும் அபாயம் இருப்பதாகவும், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப் பூச்சிகள் வருவதால் குடியிருப்புகளில் உள்ள சிறுவர், சிறுமிகள், வயதானவர்கள் அச்சம் அடைவதாக தெரிவிக்கின்றனர். எனவே, குப்பைக் கிடங்கால் சூழ்ந்து இருக்கும் மண்டபத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோடாங்கிபட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

join ETV Bharat WhatsApp channel click here
join ETV Bharat WhatsApp channel click here (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளி போல் வந்து ஆப்பிள் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வைரல்! - KOYAMBEDU MARKET APPLE THEFT

தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ளது கோடாங்கிபட்டி ஊராட்சி. இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு சமுதாயக் கூட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. ஏழை எளிய மக்கள் தங்கள் திருமண நிகழ்வுகள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் நடத்திடும் வகையில் இந்த சமுதாய மண்டபம் கட்டப்பட்டது.

பொதுமக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஊராட்சி நிர்வாகத்திடம் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த சமுதாய மண்டபம், கட்டப்பட்டதில் இருந்து ஒரு நாள் கூட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக இந்த மண்டபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடத்த ஊராட்சி நிர்வாகமும் முன் வரவில்லை என்றும், கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இன்றி இருக்கின்ற இந்த மண்டபம் குப்பைக் கழிவுகளை கொட்டும் இடமாகவும், மது பிரியர்களின் கூடாரமாகவும் மாறி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாடு இன்றி இருக்கும் மண்டபம் குப்பைக் கிடங்கால் சூழ்ந்துள்ளதால், அசுத்தம் ஏற்பட்டு நோய்வாய்ப்படும் அபாயம் இருப்பதாகவும், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப் பூச்சிகள் வருவதால் குடியிருப்புகளில் உள்ள சிறுவர், சிறுமிகள், வயதானவர்கள் அச்சம் அடைவதாக தெரிவிக்கின்றனர். எனவே, குப்பைக் கிடங்கால் சூழ்ந்து இருக்கும் மண்டபத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோடாங்கிபட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

join ETV Bharat WhatsApp channel click here
join ETV Bharat WhatsApp channel click here (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளி போல் வந்து ஆப்பிள் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வைரல்! - KOYAMBEDU MARKET APPLE THEFT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.