ETV Bharat / state

குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: புதிய அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி! - TNPSC GROUP 2 EXAM

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 12:35 PM IST

TNPSC Group 2 Interview Cancel: குரூப் 2 பதவிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை எனவும், முதல்நிலை, முதன்மைத் தேர்வு என புதிய முறையில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

TNPSC Group 2 Interview Cancel
TNPSC Group 2 Interview Cancel

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த ஆண்டு 2024ல் நடைபெறும் தேர்வுகளுக்கான அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு திட்டம், ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இனி குரூப் 2 பதவிகளுக்கு நடைமுறையில் இருந்து வந்த நேர்முகத் தேர்வு இனி கிடையாது என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதன்மை தேர்வில் தேர்வர்கள் பெரும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் தகுதித்தாள் தேர்வு, பொது அறிவு மற்றும் மொழிப்பாடங்கள் ஆகியவை இனி விடைகளை தேர்ந்தெடுத்து விடை அளிக்கும் கொள்குறி முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குருப் 2 பதவிகளில் எந்தத் துறையில் உதவியாளர் பணிக்கு தேர்வுச் செய்யப்படுவார்கள் என்ற விபரத்தையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.

தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என தெரிவித்துள்ளார். மேலும், 2&ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2&க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2&ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான்.

அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2&ஏ தொகுதி பணிகளுக்கு இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து, முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தொகுதி & 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: உலக செஸ் சாம்பியன் பட்டம் பெறுவதே இலக்கு: சென்னை திரும்பிய குகேஷ் நம்பிக்கை! - Gukesh

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த ஆண்டு 2024ல் நடைபெறும் தேர்வுகளுக்கான அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு திட்டம், ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இனி குரூப் 2 பதவிகளுக்கு நடைமுறையில் இருந்து வந்த நேர்முகத் தேர்வு இனி கிடையாது என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதன்மை தேர்வில் தேர்வர்கள் பெரும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் தகுதித்தாள் தேர்வு, பொது அறிவு மற்றும் மொழிப்பாடங்கள் ஆகியவை இனி விடைகளை தேர்ந்தெடுத்து விடை அளிக்கும் கொள்குறி முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குருப் 2 பதவிகளில் எந்தத் துறையில் உதவியாளர் பணிக்கு தேர்வுச் செய்யப்படுவார்கள் என்ற விபரத்தையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.

தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என தெரிவித்துள்ளார். மேலும், 2&ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2&க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2&ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான்.

அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2&ஏ தொகுதி பணிகளுக்கு இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து, முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தொகுதி & 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: உலக செஸ் சாம்பியன் பட்டம் பெறுவதே இலக்கு: சென்னை திரும்பிய குகேஷ் நம்பிக்கை! - Gukesh

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.