ETV Bharat / state

3 நாட்கள் தியானம் செய்ய கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - PM Modi visits Kanyakumari

PM Modi visits Kanyakumari: தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்ய 3 நாட்கள் பயணமாக கன்னியாகுமரி வருகைத் தரவுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 12:12 PM IST

பிரதமர் மோடி(கோப்புப்படம்)
பிரதமர் மோடி(கோப்புப்படம்) (Credits - ETV Bharat)

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு நாளை மறுநாள் வருகிறார். அன்று மாலை படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார்.

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல், அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் கூட அவர் மே 18 ஆம் தேதி கேதார்நாத் குகைக்கு சென்றிருந்தார்.

அதேபோல, இந்த முறையும் தியானத்தில் ஈடுபடுகிறார். மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி என இரண்டு நாட்கள் தியானம் செய்த பின்னர், ஜூன் 2 ஆம் தேதி திருவனந்தபுரம் வழியாக மீண்டும் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி போட்டியிடும் உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இறுதிகட்டமாக நடக்க உள்ள மக்களவை தேர்தலின் ஒருபகுதியாக 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தல் சமயத்தில், பரப்புரையை தொடங்கிய தமிழ்நாட்டிலேயே பிரதமர் மோடி அதனை முடித்துக் கொள்ளும் விதமாக இந்த வருகை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு: கேரளா அரசை கண்டித்து மதுரையில் வருமான வரித்துறை ஆபிஸ் முற்றுகை - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு - PR Pandian

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு நாளை மறுநாள் வருகிறார். அன்று மாலை படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார்.

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல், அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் கூட அவர் மே 18 ஆம் தேதி கேதார்நாத் குகைக்கு சென்றிருந்தார்.

அதேபோல, இந்த முறையும் தியானத்தில் ஈடுபடுகிறார். மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி என இரண்டு நாட்கள் தியானம் செய்த பின்னர், ஜூன் 2 ஆம் தேதி திருவனந்தபுரம் வழியாக மீண்டும் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி போட்டியிடும் உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இறுதிகட்டமாக நடக்க உள்ள மக்களவை தேர்தலின் ஒருபகுதியாக 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தல் சமயத்தில், பரப்புரையை தொடங்கிய தமிழ்நாட்டிலேயே பிரதமர் மோடி அதனை முடித்துக் கொள்ளும் விதமாக இந்த வருகை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு: கேரளா அரசை கண்டித்து மதுரையில் வருமான வரித்துறை ஆபிஸ் முற்றுகை - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு - PR Pandian

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.