ETV Bharat / state

குழந்தைகள் முதல் பெரியவர்களின் பாராட்டுகளை பெறும் 'கிண்டி சிறுவர் பூங்கா'..அப்படி என்ன ஸ்பெஷல்? - Guindy Childrens park

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 7:56 PM IST

Updated : Aug 12, 2024, 9:26 PM IST

Guindy Childrens park: 30 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா நூலகம், ஜூ கஃபே, பசுமை நிறைந்த செல்பி ஃபாண்ட் என கூடுதல் சிறப்பம்சங்களை பெற்று சென்னை வாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்கா
கிண்டி சிறுவர் பூங்கா (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: "இந்த நூலகத்தில் இருக்கும் புத்தகங்களில் இருந்து விலங்குகளின் குணாதிசயங்களை தெரிந்துகொண்டேன். இங்க வாங்க..சந்தோஷமா இருங்க" என புனரமைக்கப்பட்ட கிண்டி குழந்தைகள் பூங்காவை பார்வையிட வந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் வருண் பாலாஜி தனது மகிழ்ச்சியை வெளிபடுத்துகிறார்.

கிண்டி சிறுவர் பூங்கா காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

நவீன உலகின் குழந்தைகள் பொது வெளியில் சென்று விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,அரசு சார்பில் குழந்தைகளின் நலனுக்காக ஆங்காங்கே விளையாடுவதற்கு விளையாட்டு மைதான வசதிகள் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், புது பொலிவுடன் திறக்கப்பட்டுள்ள கிண்டி சிறுவர் பூங்கா சென்னை வாசிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

புனரமைக்கப்பட்ட பூங்கா
புனரமைக்கப்பட்ட பூங்கா (Credits - ETV Bharat Tamil Nadu)

30 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகஸ்ட் 4ம் தேதி திறந்து வைத்தார். புதுபொலிவுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த பூங்கா சென்னை ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் என சென்னையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பி பாய்ண்ட்
செல்பி பாய்ண்ட் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆண்டுக்கு 8 முதல் 9 லட்சம் பேர் வருகை தரும் இந்த கிண்டி சிறுவர் பூங்கா 1959ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. நவீன உலகின் குழந்தைகள் பொது வெளியில் சென்று விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை வாசிகளுக்கு இந்த பூங்கா வரப்பிரசாதமாக இருக்கிறது.

பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நூலகம்
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இயற்கை கல்வி மையம்: 2016ல் ஏற்பட்ட வர்தா புயலால் சற்று பொலிவை இழந்திருந்த பூங்கா 2023ல் மறுசீரமைப்பிற்காக மூட்டப்பட்டது. சுமார் ஒரு வருடம் கழித்து திறக்கப்பட்ட பூங்காவில் நூலகம், ஜூ கஃபே, பசுமை நிறைந்த செல்பி ஃபாண்ட் என மெருகேற்றப்பட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும், பாதுகாப்பில் அவர்களை ஈடுபடுத்தவும் இது ஒரு இயற்கை கல்வி மையமாக செயல்படுகிறது.

மேலும், பூங்காவின் பல்லுயிர் பெருக்கம், நகரவாசிகளுக்கு பகலில் அமைதியான சூழலையும், சுகாதாரமான சூழலையும் வழங்குகிறது. பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வனங்கள், 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான 314 பறவைகளும் இந்த பூங்காவில் உள்ளன.

உலக தரத்தில் சுகாதாரம்: "சற்று சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் நாங்கள் வெகு நாட்கள் வராமல் இருந்தோம், ஆனால் தற்போது கழிவறை வசதிகள் உலகத்தரத்தில் சுத்தமாக உள்ளன" என பூங்காவை குடும்பத்துடன் பார்வையிட வந்த சதிஷ் குமார் ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய சிறுவன் வருண் பாலாஜி, "இங்கு வந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன், விளையாடுவதற்கு அதிக வசதிகள் உள்ளன. நூலகத்தில் நிறைய விலங்குகள் குறித்து படித்து தெரிந்துகொண்டேன். பூச்சிகளின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள் மற்றும் அதன் குணாதியங்கள் இவையெல்லாம் தெரிந்துகொண்டேன். இங்க வாங்க..சந்தோஷமா இருங்க" என தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

கவனம் பெரும் நூலகம்: "இந்த கிண்டி குழந்தைகள் பூங்காவிற்கு நான் முதன் முதலாக வருகிறேன். இந்த பூங்காவில் விளையாடுவதற்கு மட்டுமின்றி கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து நூலகத்தை அமைத்துள்ளனர். இது ஒரு நல்ல விசயம், நூலக அலுவலர்கள் நன்றாக ஒத்துழைப்பு அளிக்கின்றனர். குழந்தைகள் படிப்பதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன, என்னுடைய குழந்தை இங்கே வந்துதான் புத்தகத்தை எடுத்து பார்க்கிறான். அதை பார்த்து அவனுக்கு தெரிந்தவரைக்கும் சொல்லி பார்க்கிறான்" என்கிறார் மோகன்ராஜ்.

கிண்டி பூங்கா கட்டணம் எவ்வளவு?: பெரியவர்களுக்கு 60 ருபாய் எனவும் சிறுவர் சிறுமியர்களுக்கு 10 ருபாய் எனவும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூங்காவின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. அதே போல நூலகத்தின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. பூங்காவில் இருக்கும் நூலகத்தில் 1200 புத்தகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: டீ மொய் விருந்து; வயநாடு மக்களுக்கு கைகொடுக்கும் புதுக்கோட்டை டீக்கடைக்காரர்! - Tea Moi Feast For Wayanad Fund

சென்னை: "இந்த நூலகத்தில் இருக்கும் புத்தகங்களில் இருந்து விலங்குகளின் குணாதிசயங்களை தெரிந்துகொண்டேன். இங்க வாங்க..சந்தோஷமா இருங்க" என புனரமைக்கப்பட்ட கிண்டி குழந்தைகள் பூங்காவை பார்வையிட வந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் வருண் பாலாஜி தனது மகிழ்ச்சியை வெளிபடுத்துகிறார்.

கிண்டி சிறுவர் பூங்கா காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

நவீன உலகின் குழந்தைகள் பொது வெளியில் சென்று விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,அரசு சார்பில் குழந்தைகளின் நலனுக்காக ஆங்காங்கே விளையாடுவதற்கு விளையாட்டு மைதான வசதிகள் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், புது பொலிவுடன் திறக்கப்பட்டுள்ள கிண்டி சிறுவர் பூங்கா சென்னை வாசிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

புனரமைக்கப்பட்ட பூங்கா
புனரமைக்கப்பட்ட பூங்கா (Credits - ETV Bharat Tamil Nadu)

30 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகஸ்ட் 4ம் தேதி திறந்து வைத்தார். புதுபொலிவுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த பூங்கா சென்னை ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் என சென்னையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பி பாய்ண்ட்
செல்பி பாய்ண்ட் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஆண்டுக்கு 8 முதல் 9 லட்சம் பேர் வருகை தரும் இந்த கிண்டி சிறுவர் பூங்கா 1959ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. நவீன உலகின் குழந்தைகள் பொது வெளியில் சென்று விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை வாசிகளுக்கு இந்த பூங்கா வரப்பிரசாதமாக இருக்கிறது.

பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நூலகம்
பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இயற்கை கல்வி மையம்: 2016ல் ஏற்பட்ட வர்தா புயலால் சற்று பொலிவை இழந்திருந்த பூங்கா 2023ல் மறுசீரமைப்பிற்காக மூட்டப்பட்டது. சுமார் ஒரு வருடம் கழித்து திறக்கப்பட்ட பூங்காவில் நூலகம், ஜூ கஃபே, பசுமை நிறைந்த செல்பி ஃபாண்ட் என மெருகேற்றப்பட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவும், பாதுகாப்பில் அவர்களை ஈடுபடுத்தவும் இது ஒரு இயற்கை கல்வி மையமாக செயல்படுகிறது.

மேலும், பூங்காவின் பல்லுயிர் பெருக்கம், நகரவாசிகளுக்கு பகலில் அமைதியான சூழலையும், சுகாதாரமான சூழலையும் வழங்குகிறது. பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வனங்கள், 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான 314 பறவைகளும் இந்த பூங்காவில் உள்ளன.

உலக தரத்தில் சுகாதாரம்: "சற்று சுகாதாரம் இல்லாமல் இருந்ததால் நாங்கள் வெகு நாட்கள் வராமல் இருந்தோம், ஆனால் தற்போது கழிவறை வசதிகள் உலகத்தரத்தில் சுத்தமாக உள்ளன" என பூங்காவை குடும்பத்துடன் பார்வையிட வந்த சதிஷ் குமார் ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய சிறுவன் வருண் பாலாஜி, "இங்கு வந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன், விளையாடுவதற்கு அதிக வசதிகள் உள்ளன. நூலகத்தில் நிறைய விலங்குகள் குறித்து படித்து தெரிந்துகொண்டேன். பூச்சிகளின் பெயர்கள், விலங்குகளின் பெயர்கள் மற்றும் அதன் குணாதியங்கள் இவையெல்லாம் தெரிந்துகொண்டேன். இங்க வாங்க..சந்தோஷமா இருங்க" என தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

கவனம் பெரும் நூலகம்: "இந்த கிண்டி குழந்தைகள் பூங்காவிற்கு நான் முதன் முதலாக வருகிறேன். இந்த பூங்காவில் விளையாடுவதற்கு மட்டுமின்றி கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து நூலகத்தை அமைத்துள்ளனர். இது ஒரு நல்ல விசயம், நூலக அலுவலர்கள் நன்றாக ஒத்துழைப்பு அளிக்கின்றனர். குழந்தைகள் படிப்பதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன, என்னுடைய குழந்தை இங்கே வந்துதான் புத்தகத்தை எடுத்து பார்க்கிறான். அதை பார்த்து அவனுக்கு தெரிந்தவரைக்கும் சொல்லி பார்க்கிறான்" என்கிறார் மோகன்ராஜ்.

கிண்டி பூங்கா கட்டணம் எவ்வளவு?: பெரியவர்களுக்கு 60 ருபாய் எனவும் சிறுவர் சிறுமியர்களுக்கு 10 ருபாய் எனவும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூங்காவின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. அதே போல நூலகத்தின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. பூங்காவில் இருக்கும் நூலகத்தில் 1200 புத்தகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: டீ மொய் விருந்து; வயநாடு மக்களுக்கு கைகொடுக்கும் புதுக்கோட்டை டீக்கடைக்காரர்! - Tea Moi Feast For Wayanad Fund

Last Updated : Aug 12, 2024, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.