ETV Bharat / state

அரியலூரில் பல்லவர் கால அய்யனார் சிலை வழிபாடு.. வரலாற்று ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு! - AYYANAR STATUE FOUND IN ARIYALUR

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 2:54 PM IST

AYYANAR STATUE FOUND IN ARIYALUR: அரியலூர் பெரியார் சமத்துவபுரத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிலையை அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் சிலையை தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

AYYANAR STATUE FOUND IN ARIYALUR
AYYANAR STATUE FOUND IN ARIYALUR

அரியலூர்: உடையார்பாளையம் அருகே உள்ள பெரியார் சமத்துவபுரம் பகுதியில், பழங்கால சிலை ஒன்று உள்ளதாக ஜெ.தத்தனூர் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர், அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில், அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மணியன் கலியமூர்த்தி தலைமையிலான குழுவினர், இந்த பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, உடையார்பாளையம் அருகில் கீழவெளி சமத்துவபுரம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில், மண்ணில் சாய்ந்தபடி ஒரு பலகை குறுஞ்சிற்பம் காணப்பட்டுள்ளது. அந்தச் சிற்பத்தை ஆய்வு செய்தபோது, அது 7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. சுமார் ஒன்றரை அடி அகலமும், ஒன்றரை அடி உயரமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அய்யனார் சிலை செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அழகிய ஜடாபாரம் தலையை அலங்கரிக்க, வட்டமான முகமும், இரு காதுகளில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி அளிக்கிறது. உருளையான மணிகள் கோர்க்கப்பட்ட சரப்பள்ளி போன்ற மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு, இருக்கைகளிலும் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து காணப்படுகிறது. அதேபோல, உத்குதிகாசன கோலத்தில் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்து காணப்படுகிறது.

இடையில் உதிரபந்தமும், இடை ஆடையில் உறையுடன் கூடிய குறுவால் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. வலது கையை இடது காலின் முட்டி மீது வைத்து தாங்கியபடி, கரத்தில் செண்டை பற்றிக்கொண்டும், இடது கையைத் ஊறுகஸ்த நிலையில் வைத்து காணப்படுகிறது. இந்தச் சிற்பத்தின் அமைதியையும், அதில் காட்டப்பட்டுள்ள அணிகலன்களையும் வைத்துப் பார்க்கையில் இச்சிற்பம் கி.பி. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் காலத்தியதாக இருக்கக் கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 1,300 வருடம் பழைமையான சிற்பம் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தபடியே இருந்துள்ளதால், இந்தச் சிற்பத்தின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் வேப்பமரத்திற்கு கீழே இந்த அய்யனார் சிற்பத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த சிற்பத்தைச் சுற்றிலும் குதிரை, யானை மற்றும் வீரர், வீராங்கனைகள் என சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அழகிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் காணப்படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் முனைவர் மதுரை வீரன், சீனிவாசன் ஆகியோர் இந்த மேற்பரப்பு கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அய்யனார் சிலைகள் கண்டறியப்படுவது ஏன்? மேலும், இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் மணியன் கலியமூர்த்தி கூறுகையில், “பண்டைய காலத்தில் தரைவழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் சாத்துவர் என்றும், கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் நாயகர் என்றும் அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் தரை வழியாக வணிகம் செய்த வணிகர்கள், தங்களின் காவல் தெய்வமாக அய்யனாரை வழிபட்டனர்.

அவ்வணிகர்கள் தாங்கள் பயணம் செய்யும் பெரு வழிகளில் அய்யனார் சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் பெருவழிகள் என்றழைக்கப்படும் தரை வழி வணிகர்கள் பயணிக்கும் இடங்களில் அதிக அளவில் அய்யனார் சிலைகள் உண்டானது. தொடக்க கால அய்யனார் சிலைகள் தனிச்சிற்பமாகவே வடிக்கப்படிருக்கும்.

அதற்குப் பிறகு ஒரு பூர்ணகலா என்றழைக்கப்படும் பெண் சிறபத்துடன் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த பெண் சிற்பம் அய்யனாரின் மனைவி என்றும், சில பகுதிகளில் பணிப்பெண்ணாகவும் கருதுவதுண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சைக்கிள் விளையாட்டின் போது வீட்டு முகவரியை மறந்த சிறுவன்.. போலீசார் மீட்டது எப்படி? - Poonamallee Boy Missing Issue

அரியலூர்: உடையார்பாளையம் அருகே உள்ள பெரியார் சமத்துவபுரம் பகுதியில், பழங்கால சிலை ஒன்று உள்ளதாக ஜெ.தத்தனூர் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர், அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில், அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மணியன் கலியமூர்த்தி தலைமையிலான குழுவினர், இந்த பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, உடையார்பாளையம் அருகில் கீழவெளி சமத்துவபுரம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில், மண்ணில் சாய்ந்தபடி ஒரு பலகை குறுஞ்சிற்பம் காணப்பட்டுள்ளது. அந்தச் சிற்பத்தை ஆய்வு செய்தபோது, அது 7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. சுமார் ஒன்றரை அடி அகலமும், ஒன்றரை அடி உயரமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக அய்யனார் சிலை செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அழகிய ஜடாபாரம் தலையை அலங்கரிக்க, வட்டமான முகமும், இரு காதுகளில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி அளிக்கிறது. உருளையான மணிகள் கோர்க்கப்பட்ட சரப்பள்ளி போன்ற மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு, இருக்கைகளிலும் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து காணப்படுகிறது. அதேபோல, உத்குதிகாசன கோலத்தில் இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்து காணப்படுகிறது.

இடையில் உதிரபந்தமும், இடை ஆடையில் உறையுடன் கூடிய குறுவால் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. வலது கையை இடது காலின் முட்டி மீது வைத்து தாங்கியபடி, கரத்தில் செண்டை பற்றிக்கொண்டும், இடது கையைத் ஊறுகஸ்த நிலையில் வைத்து காணப்படுகிறது. இந்தச் சிற்பத்தின் அமைதியையும், அதில் காட்டப்பட்டுள்ள அணிகலன்களையும் வைத்துப் பார்க்கையில் இச்சிற்பம் கி.பி. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் காலத்தியதாக இருக்கக் கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 1,300 வருடம் பழைமையான சிற்பம் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தபடியே இருந்துள்ளதால், இந்தச் சிற்பத்தின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் வேப்பமரத்திற்கு கீழே இந்த அய்யனார் சிற்பத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த சிற்பத்தைச் சுற்றிலும் குதிரை, யானை மற்றும் வீரர், வீராங்கனைகள் என சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அழகிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள் காணப்படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் அரியலூர் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் முனைவர் மதுரை வீரன், சீனிவாசன் ஆகியோர் இந்த மேற்பரப்பு கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அய்யனார் சிலைகள் கண்டறியப்படுவது ஏன்? மேலும், இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் மணியன் கலியமூர்த்தி கூறுகையில், “பண்டைய காலத்தில் தரைவழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் சாத்துவர் என்றும், கடல் வழிப் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்தவர்கள் நாயகர் என்றும் அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் தரை வழியாக வணிகம் செய்த வணிகர்கள், தங்களின் காவல் தெய்வமாக அய்யனாரை வழிபட்டனர்.

அவ்வணிகர்கள் தாங்கள் பயணம் செய்யும் பெரு வழிகளில் அய்யனார் சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த வகையில், தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் பெருவழிகள் என்றழைக்கப்படும் தரை வழி வணிகர்கள் பயணிக்கும் இடங்களில் அதிக அளவில் அய்யனார் சிலைகள் உண்டானது. தொடக்க கால அய்யனார் சிலைகள் தனிச்சிற்பமாகவே வடிக்கப்படிருக்கும்.

அதற்குப் பிறகு ஒரு பூர்ணகலா என்றழைக்கப்படும் பெண் சிறபத்துடன் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த பெண் சிற்பம் அய்யனாரின் மனைவி என்றும், சில பகுதிகளில் பணிப்பெண்ணாகவும் கருதுவதுண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சைக்கிள் விளையாட்டின் போது வீட்டு முகவரியை மறந்த சிறுவன்.. போலீசார் மீட்டது எப்படி? - Poonamallee Boy Missing Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.