ETV Bharat / state

வண்டலூரில் இருந்து மாயமான 2 அனுமன் குரங்குகளில் ஒன்று பிடிபட்டது..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 10:41 PM IST

Hanuman Langur: வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து மாயமான இரண்டு அனுமன் குரங்குகளில் ஒன்று மண்ணிவாக்கம் பகுதியில் பிடிபட்டது.

hanuman monkey was caught
வண்டலூரியில் இருந்து மாயமான அனுமன் குரங்கு பிடிபட்டது

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1,977 வன விலங்குகள் உள்ளன. இதனைப் பார்வையிடுவதற்காக இப்பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், கடந்த மாதம் கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதற்கு மாற்றாக, வண்டலூரிலிருந்து ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்பு, 2 ஜோடி சருகுமான், 3 நெருப்புக்கோழி, ஒரு ஜோடி பச்சை உடும்பு, ஓர் ஆண் சாம்பல் ஓநாய் ஆகியவை கான்பூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டன. புதியதாக வருகை தந்த இந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தனிக் கூண்டுகளில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், குரங்குகளுக்கு உணவு வைக்கும்போது, 2 அனுமன் குரங்குகள் கூண்டிலிருந்து தப்பித்துக் காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பூங்காவிலிருந்து தப்பி ஓடிய அனுமன் குரங்குகளைப் பிடிப்பதற்கு வன அலுவலர்கள் பூங்கா ஊழியர்கள் குழு அமைக்கப்பட்டு நவீன மயக்க ஊசி துப்பாக்கி மூலம் குரங்குகளைப் பிடிப்பதற்குத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கடந்த நான்கு நாட்களாக இரண்டு குரங்குகளையும் வன அலுவலர்கள் பூங்கா ஊழியர்கள் தேடிவந்த நிலையில், ஒரு குரங்கு மண்ணிவாக்கம் காவல் நிலையம் அருகில் இருப்பதாகப் பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குத் தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில், வனத்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அந்த பகுதிக்குச் சென்று இரண்டு மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்தி ஒரு குரங்கினை பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பத்திரமாகக் கொண்டு சென்றனர்.

மற்றொரு குரங்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள செல்போன் டவரில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்குச் சென்று மூன்று மணி நேரத்திற்கு மேலாகக் குரங்கு கீழே இறங்குவதற்காகக் காத்திருந்தனர். இருப்பினும் இறங்கிய வேகத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் குரங்கு தப்பிச் சென்றது. இதனால் தப்பிச்சென்ற இரண்டு குரங்குகளில் ஒரு குரங்கு பிடிபட்டது. மற்றொரு குரங்கினை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் பிடிங்க: புதுச்சேரியில் பெண் குழந்தை கடத்தல்.. 24 மணிநேரத்தில் 3 பேரை பிடித்த காவல்துறையினர்!

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1,977 வன விலங்குகள் உள்ளன. இதனைப் பார்வையிடுவதற்காக இப்பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், கடந்த மாதம் கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதற்கு மாற்றாக, வண்டலூரிலிருந்து ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்பு, 2 ஜோடி சருகுமான், 3 நெருப்புக்கோழி, ஒரு ஜோடி பச்சை உடும்பு, ஓர் ஆண் சாம்பல் ஓநாய் ஆகியவை கான்பூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டன. புதியதாக வருகை தந்த இந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தனிக் கூண்டுகளில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், குரங்குகளுக்கு உணவு வைக்கும்போது, 2 அனுமன் குரங்குகள் கூண்டிலிருந்து தப்பித்துக் காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பூங்காவிலிருந்து தப்பி ஓடிய அனுமன் குரங்குகளைப் பிடிப்பதற்கு வன அலுவலர்கள் பூங்கா ஊழியர்கள் குழு அமைக்கப்பட்டு நவீன மயக்க ஊசி துப்பாக்கி மூலம் குரங்குகளைப் பிடிப்பதற்குத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கடந்த நான்கு நாட்களாக இரண்டு குரங்குகளையும் வன அலுவலர்கள் பூங்கா ஊழியர்கள் தேடிவந்த நிலையில், ஒரு குரங்கு மண்ணிவாக்கம் காவல் நிலையம் அருகில் இருப்பதாகப் பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குத் தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில், வனத்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அந்த பகுதிக்குச் சென்று இரண்டு மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்தி ஒரு குரங்கினை பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பத்திரமாகக் கொண்டு சென்றனர்.

மற்றொரு குரங்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் உள்ள செல்போன் டவரில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்குச் சென்று மூன்று மணி நேரத்திற்கு மேலாகக் குரங்கு கீழே இறங்குவதற்காகக் காத்திருந்தனர். இருப்பினும் இறங்கிய வேகத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் குரங்கு தப்பிச் சென்றது. இதனால் தப்பிச்சென்ற இரண்டு குரங்குகளில் ஒரு குரங்கு பிடிபட்டது. மற்றொரு குரங்கினை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் பிடிங்க: புதுச்சேரியில் பெண் குழந்தை கடத்தல்.. 24 மணிநேரத்தில் 3 பேரை பிடித்த காவல்துறையினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.