ETV Bharat / state

ஆம்னி பேருந்துகளில் வழக்கம் போல முன்பதிவு செய்யலாமா..? - பயணிகளுக்கு முக்கிய தகவல்! - omni bus issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 4:55 PM IST

omni bus booking: வெளிமாநிலப் பேருந்துகளை தமிழ்நாடு பதிவு எண்ணிற்கு மாற்றாமல் இயக்கமாட்டோம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஆம்னி பேருந்து (கோப்புப்படம்)
ஆம்னி பேருந்து (கோப்புப்படம்) (Credit - Etv Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலா விதிகளை மீறி இயங்கும் 800 வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னிப் பேருந்துகளை தமிழ்நாடு பதிவிற்கு மாற்றும் வரையில் இயக்கும் எண்ணம் இல்லை என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "வெளிமாநிலப் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் விவரங்கள் 'ரெட் பஸ்' போன்ற டிக்கெட் பதிவு செய்யும் செயலிகளில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் படுக்கை வசதிக் கொண்ட ஆம்னிப் பேருந்துகளை 2020 ஆம் ஆண்டு முதல் தான் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

''தற்போது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட பேருந்துகளாக மாற்றியது போக மீதமுள்ள பேருந்துகளையும் பதிவு செய்ய தயாராக தான் உள்ளோம். எஞ்சியுள்ள பேருந்துகளை பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளோம், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். ஒரு பேருந்தை பதிவு செய்ய ஒரு மாதம் வரை ஆகிறது.

பேருந்துகளை பதிவு செய்வதற்கு பழைய முறையே கையாளப்படுகிறது. கேரளா போன்ற மாநிலங்களில் ஒரு நாளிலேயே பதிவு செய்து பேருந்து ஓட்ட முடியும். அங்கு தட்கல் முறை உள்ளது. அது தமிழகத்தில் இல்லை. அண்டை மாநிலங்களில் பேருந்துகளை ஒரே நாளில் பதிவு செய்யும் முறை உள்ளதை போல், தமிழ்நாட்டிலும் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆம்னி பேருந்துகளில் வழக்கம்போல பயணிகள் முன்பதிவு செய்யலாம். அதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வெளிமாநிலப் பேருந்துகளை தமிழ்நாடு பதிவு எண்ணிற்கு மாற்றாமல் இயக்கமாட்டோம்.

எனவே, பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு தேவையான அளவிற்கு ஆம்னிப் பேருந்துகள் உள்ளன. ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். தடையை மீறி பேருந்துகளை இயக்கும் எண்ணம் இதுவரை இல்லை'' என்று அன்பழகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் மூளை ஆராய்ச்சிக்காக முன்னாள் மாணவர் ரூ.45 கோடி நன்கொடை!

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலா விதிகளை மீறி இயங்கும் 800 வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னிப் பேருந்துகளை தமிழ்நாடு பதிவிற்கு மாற்றும் வரையில் இயக்கும் எண்ணம் இல்லை என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "வெளிமாநிலப் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் விவரங்கள் 'ரெட் பஸ்' போன்ற டிக்கெட் பதிவு செய்யும் செயலிகளில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் படுக்கை வசதிக் கொண்ட ஆம்னிப் பேருந்துகளை 2020 ஆம் ஆண்டு முதல் தான் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

''தற்போது தமிழ்நாடு பதிவு எண் கொண்ட பேருந்துகளாக மாற்றியது போக மீதமுள்ள பேருந்துகளையும் பதிவு செய்ய தயாராக தான் உள்ளோம். எஞ்சியுள்ள பேருந்துகளை பதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளோம், ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர். ஒரு பேருந்தை பதிவு செய்ய ஒரு மாதம் வரை ஆகிறது.

பேருந்துகளை பதிவு செய்வதற்கு பழைய முறையே கையாளப்படுகிறது. கேரளா போன்ற மாநிலங்களில் ஒரு நாளிலேயே பதிவு செய்து பேருந்து ஓட்ட முடியும். அங்கு தட்கல் முறை உள்ளது. அது தமிழகத்தில் இல்லை. அண்டை மாநிலங்களில் பேருந்துகளை ஒரே நாளில் பதிவு செய்யும் முறை உள்ளதை போல், தமிழ்நாட்டிலும் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆம்னி பேருந்துகளில் வழக்கம்போல பயணிகள் முன்பதிவு செய்யலாம். அதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வெளிமாநிலப் பேருந்துகளை தமிழ்நாடு பதிவு எண்ணிற்கு மாற்றாமல் இயக்கமாட்டோம்.

எனவே, பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு தேவையான அளவிற்கு ஆம்னிப் பேருந்துகள் உள்ளன. ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். தடையை மீறி பேருந்துகளை இயக்கும் எண்ணம் இதுவரை இல்லை'' என்று அன்பழகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் மூளை ஆராய்ச்சிக்காக முன்னாள் மாணவர் ரூ.45 கோடி நன்கொடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.