ETV Bharat / state

அடுத்த 5 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்! - weather report - WEATHER REPORT

weather report: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் வெப்ப அலை வீச இருப்பதால் மக்களுக்கு ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்ப அலை காரணமாக ஓரிரு இடங்களில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 3:48 PM IST

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் வெப்ப அலை வீச இருப்பதால் ஓரிரு இடங்களில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் (திருநெல்வேலி மாவட்டம்) ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதுவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 41.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 40.5 டிகிரி செல்சியஸ் மற்றும் தர்மபுரியில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22 டிகிரி – 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்.18) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதை தொடர்ந்து ஏப்.19. ம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்.20 ம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.21 மற்றும் ஏப்.22 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.23 மற்றும் ஏப்.24 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: ஏப்.18 முதல் ஏப்.22 வரையான தேதிகளில் அடுத்த இரண்டு தினங்களில், அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகத்தில் படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் 2 டிகிரி – 3 டிகிரி செல்சியஸாக சற்றே குறையக்கூடும்.

ஏப்.18 மற்றும் ஏப்.19 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3 டிகிரி – 5 டிகிரி செல்சியஸாக, இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 – 42 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

அதே போல் ஏப்.20 முதல் ஏப்.22 வரையான தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 டிகிரி – 3 டிகிரி செல்சியஸாக படிப்படியாக குறையக்கூடும்.

ஈரப்பதம்: ஏப்.18 முதல் ஏப்.22 வரையான தேதிகளில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: ஏப்.18 மற்றும் ஏப்.19 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏப்.19 மற்றும் ஏப்.20 ஆகிய தேதிகளில் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த பட்டுள்ளனர் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்! - Robbery In Mayiladuthurai

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் வெப்ப அலை வீச இருப்பதால் ஓரிரு இடங்களில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் (திருநெல்வேலி மாவட்டம்) ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதுவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 41.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 40.5 டிகிரி செல்சியஸ் மற்றும் தர்மபுரியில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22 டிகிரி – 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்.18) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதை தொடர்ந்து ஏப்.19. ம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்.20 ம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.21 மற்றும் ஏப்.22 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.23 மற்றும் ஏப்.24 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: ஏப்.18 முதல் ஏப்.22 வரையான தேதிகளில் அடுத்த இரண்டு தினங்களில், அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகத்தில் படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் 2 டிகிரி – 3 டிகிரி செல்சியஸாக சற்றே குறையக்கூடும்.

ஏப்.18 மற்றும் ஏப்.19 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3 டிகிரி – 5 டிகிரி செல்சியஸாக, இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 – 42 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

அதே போல் ஏப்.20 முதல் ஏப்.22 வரையான தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 டிகிரி – 3 டிகிரி செல்சியஸாக படிப்படியாக குறையக்கூடும்.

ஈரப்பதம்: ஏப்.18 முதல் ஏப்.22 வரையான தேதிகளில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: ஏப்.18 மற்றும் ஏப்.19 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏப்.19 மற்றும் ஏப்.20 ஆகிய தேதிகளில் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த பட்டுள்ளனர் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்! - Robbery In Mayiladuthurai

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.