ETV Bharat / state

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 960 கிராம் தங்கம் பறிமுதல்! - Chennai Airport Gold Smuggling

Gold Smuggling at Chennai Airport: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.62 லட்சம் மதிப்புடைய 960 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 3:05 PM IST

பறிமுதல் செய்த தங்கம் புகைப்படம்
பறிமுதல் செய்த தங்கம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வரும் தனியார் பயணிகள் விமானம் நேற்று வழக்கம் போல் வந்தது. அப்போது அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியின் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அதில் எதுவும் இல்லாத காரணத்தால், பயணியை தனியாக அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அவர் உள்ளாடைகளுக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அந்த பயணி உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 960 கிராம் தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.62 லட்சம் ஆகும். இதையடுத்து, தங்கம் கடத்தி வந்த பயணியை கைது செய்த சுங்க அதிகாரிகள், மேலும் விசாரணை நடத்தினர்.

அதோடு தங்கம் கடத்தி வந்த பயணிக்கும், சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லண்டன் பயணம் குறித்த செய்திக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த விளக்கம்!

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வரும் தனியார் பயணிகள் விமானம் நேற்று வழக்கம் போல் வந்தது. அப்போது அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியின் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்துள்ளனர். அதில் எதுவும் இல்லாத காரணத்தால், பயணியை தனியாக அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, அவர் உள்ளாடைகளுக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அந்த பயணி உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 960 கிராம் தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.62 லட்சம் ஆகும். இதையடுத்து, தங்கம் கடத்தி வந்த பயணியை கைது செய்த சுங்க அதிகாரிகள், மேலும் விசாரணை நடத்தினர்.

அதோடு தங்கம் கடத்தி வந்த பயணிக்கும், சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லண்டன் பயணம் குறித்த செய்திக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.