ETV Bharat / state

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; நயினார் நாகேந்திரன் உறவினர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்! - CBCID Investigate In 4 Crore Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 3:48 PM IST

Tambaram 4 crore seized issue: தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவரும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

Tambaram 4 crore seized issue
Tambaram 4 crore seized issue

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, அதனை எடுத்து வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஓட்டலில் இருந்து பணம் கொண்டு வருவதாகவும், இது தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பல்வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளது எனவும், சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து பணம் கைமாற்றிக் கொண்டு செல்வதாகவும் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் பாஜக நிர்வாகி கோவர்தனுக்குச் சொந்தமான இடங்கள், வீடுகள், ஓட்டல்களில் தாம்பரம் காவல் துறையினர் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தி, பணம் உள்பட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியினர்.

மேலும், இதில் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி தாம்பரம் போலீசார் விசாரணை செய்து வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசாருக்கு இந்த வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பாக ஆவணங்களைப் பெற்ற பின்பு, தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் கொண்டு சென்று சிக்கிய மூன்று பேர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், தாம்பரம் ரயில் நிலையம், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஓட்டல், அவரது உறவினரான முருகன் இல்லம் ஆகிய இடங்களுக்குச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், பணம் கொண்டு சென்று சிக்கிய மூவரில் நவீன், பெருமாள் மற்றும் சதீஷ் ஆகிய மூவருக்கு நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், 12 மணியளவில் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் மூவரும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மேலும், அவர்களிடம் இந்த பணம் யாருடையது, எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை செய்தனர். சுமார் 10 மணி நேரம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன. அவர்கள் அளித்த வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளனர்.

மேலும், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து செல்போன்களை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் உறவினரான முருகன் என்பவர் ஆட்களை அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில், அவரிடம் விசாரணை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர்.

இந்த நிலையில், இன்று முருகன் அவரது உதவியாளர் ஆசைதம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் அவரது உதவியாளர் ஆசைதம்பி ஆகியோரும் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் ஏற்கனவே நயினார் நாகேந்திரன் உறவினரான முருகன் தன்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு ஆட்கள் தேவை எனக் கூறியதால், தான் ஆட்களை அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில், அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர் யார், ஆட்களை உதவிக்கு அழைத்தது யார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே தாம்பரம் காவல்துறையினர் விசாரணை செய்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் பதிவுகளை வைத்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘காவலர்’ ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு ரூ.500 அபாராதம்.. சென்னையில் அதிரடி நடவடிக்கை! - Vehicle Sticker Fine

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, அதனை எடுத்து வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஓட்டலில் இருந்து பணம் கொண்டு வருவதாகவும், இது தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பல்வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளது எனவும், சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து பணம் கைமாற்றிக் கொண்டு செல்வதாகவும் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் பாஜக நிர்வாகி கோவர்தனுக்குச் சொந்தமான இடங்கள், வீடுகள், ஓட்டல்களில் தாம்பரம் காவல் துறையினர் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தி, பணம் உள்பட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியினர்.

மேலும், இதில் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி தாம்பரம் போலீசார் விசாரணை செய்து வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசாருக்கு இந்த வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பாக ஆவணங்களைப் பெற்ற பின்பு, தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் கொண்டு சென்று சிக்கிய மூன்று பேர் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், தாம்பரம் ரயில் நிலையம், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஓட்டல், அவரது உறவினரான முருகன் இல்லம் ஆகிய இடங்களுக்குச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், பணம் கொண்டு சென்று சிக்கிய மூவரில் நவீன், பெருமாள் மற்றும் சதீஷ் ஆகிய மூவருக்கு நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், 12 மணியளவில் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் மூவரும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மேலும், அவர்களிடம் இந்த பணம் யாருடையது, எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை செய்தனர். சுமார் 10 மணி நேரம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன. அவர்கள் அளித்த வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளனர்.

மேலும், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து செல்போன்களை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் உறவினரான முருகன் என்பவர் ஆட்களை அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில், அவரிடம் விசாரணை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டனர்.

இந்த நிலையில், இன்று முருகன் அவரது உதவியாளர் ஆசைதம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் அவரது உதவியாளர் ஆசைதம்பி ஆகியோரும் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் ஏற்கனவே நயினார் நாகேந்திரன் உறவினரான முருகன் தன்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவிக்கு ஆட்கள் தேவை எனக் கூறியதால், தான் ஆட்களை அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில், அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர் யார், ஆட்களை உதவிக்கு அழைத்தது யார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ஏற்கனவே தாம்பரம் காவல்துறையினர் விசாரணை செய்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் பதிவுகளை வைத்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘காவலர்’ ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு ரூ.500 அபாராதம்.. சென்னையில் அதிரடி நடவடிக்கை! - Vehicle Sticker Fine

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.