சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் முழுக்க தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்தாண்டு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அதுபோல, இந்தாண்டும் மாநிலத்தில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
'மாணவர்கள் அரசியலையும் தேர்ந்தெடுங்கள்' - தவெக தலைவர் விஜய்
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) June 28, 2024
#விஜய் #தவெக #TVK #TVKVijay #vijay #ThalapathyVijayStudentsMeet #etvbharattamil @actorvijay @tvkvijayhq #VijayHonoursStudents pic.twitter.com/6hmbUvgWuB
'விஜய் கல்வி விருதுகள்' என்ற பெயரில் நடக்கும் இந்த விழா, இம்முறை இரண்டு பகுதிகளாக நடக்கிறது. இன்று நடந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,500 மாணவர்களில் இன்று முதல்கட்டமாக 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல, இரண்டாவது கட்டமாக ஜூலை 3ஆம் தேதி விழா நடக்கவுள்ளது.
முன்னதாக, இன்று நடைபெற்ற விழாவில் விஜய் ஒரு அரசியல் கட்சித் தலைவராக சூடான கருத்துக்களை வைப்பார் என அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டது. அதன்படியே, விஜய் ''இங்கு நல்ல தலைவர்கள்தான் அதிகம் தேவை, நான் இதனை அரசியல் ரீதியாக சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும், எதிர்காலத்தில் அரசியலும் கரியரில் ஒரு தேர்வாக இருக்க வேண்டும். நன்கு படித்தவர்கள் நல்ல தலைவர்களாக வர வேண்டும். படிக்கும் போது மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்'' என கூறினார்.