ETV Bharat / state

பழனியில் துவங்கிய 'முத்தமிழ் முருகன் மாநாடு'..இரண்டு நாட்கள் என்னென்ன நிகழ்ச்சிகள்? இதோ முழு விவரம்! - Muthamizh Murugan Maanadu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 11:03 AM IST

Muthamizh Murugan Maanadu: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் 2 நாட்கள் நடைபெறவுள்ள 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை' சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

முக ஸ்டாலின் மற்றும் முத்தமிழ் முருகன் மாநாட்டு அரங்கம்
முக ஸ்டாலின் மற்றும் முத்தமிழ் முருகன் மாநாட்டு அரங்கம் (Credits- ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' இன்று (ஆக.24) காலை 8.30 மணியளவில் துவங்கியது. அருள்மிகு பழனி ஆண்கள் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணியளவில், சென்னையில் இருந்து காணொளி வாயிலாகத் துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டிற்காக கால்கோள் ஊன்றும் விழா கடந்த 3 ஆம் தேதி துவங்கி பணிகள் நடைபெற்று வந்தன. அதற்காக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள கம்பத்தில் மாநாட்டு கொடி ஏற்றப்பட்டது.

மொத்தமாக இங்கு 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திரையரங்கு மற்றும் நூலகத்தை அமைச்சர் சேகர்பாபு, ஐ. பெரியசாமி, அரா சக்கரபாணி ஆகியோர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தனர். அதனைத் தொடந்து மாநாடு நடைபெறும் அருணகிரிநாதர் அரங்கில் ஆதீனங்கள், அமைச்சர்கள் சிறப்பு உரை ஆற்றினர். மேலும் மாநாட்டு மலரும் வெளியிடப்பட்டது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆதீனங்களின் சிறப்புரை, முருகனைப் பற்றிய பாடல்கள், நடனம், நாடகம், மங்கல இசை என தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் 5 அரங்குகளில் ஆய்வு கட்டுரைகள் மீது விவாதமும் நடைபெறவுள்ளது. அதற்காக 1,300 கட்டுரைகள் பலரால் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் திருவாடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், குருமகா சந்நிதானம், சிரவை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 15 ஆதீனங்கள் மற்றும் 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதுதவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 3-டி வடிவில் முருகனை அருகில் இருந்து தரிசனம் செய்யும் வகையிலும், 100 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முருகனின் பெருமையை விளக்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், முருகன் புகழை சொல்லும் கும்மியாட்டம், கந்த சஷ்டி கவசம் என காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், தொடர்ந்து 2 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டை முன்னிட்டு 8 இடங்களில் அலங்கார வரவேற்பு, தலைவர்கள் மாநாட்டு வரும்போது 5000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு கண்காட்சிக்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்பதால் சுகாதாரத்துறை சார்பில் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்காகவும், தூய்மை பணியாளர்கள், பிரத்யேகமான மருத்துவ வாகனங்கள், கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 450-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்கள் சீருடையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகைதரும் அனைவருக்கும் 200 கிராம் அளவிலான பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, லேமினேசன் செய்யபட்ட முருகன் போட்டோ வழங்க பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளுன. மேலும் இந்த மாநாட்டிற்காக மக்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டம் அதிகமாக இருப்பதால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முதல்முறையாக இந்த மாநாடு பெரிய அளவில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்!

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' இன்று (ஆக.24) காலை 8.30 மணியளவில் துவங்கியது. அருள்மிகு பழனி ஆண்கள் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணியளவில், சென்னையில் இருந்து காணொளி வாயிலாகத் துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டிற்காக கால்கோள் ஊன்றும் விழா கடந்த 3 ஆம் தேதி துவங்கி பணிகள் நடைபெற்று வந்தன. அதற்காக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள கம்பத்தில் மாநாட்டு கொடி ஏற்றப்பட்டது.

மொத்தமாக இங்கு 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திரையரங்கு மற்றும் நூலகத்தை அமைச்சர் சேகர்பாபு, ஐ. பெரியசாமி, அரா சக்கரபாணி ஆகியோர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தனர். அதனைத் தொடந்து மாநாடு நடைபெறும் அருணகிரிநாதர் அரங்கில் ஆதீனங்கள், அமைச்சர்கள் சிறப்பு உரை ஆற்றினர். மேலும் மாநாட்டு மலரும் வெளியிடப்பட்டது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆதீனங்களின் சிறப்புரை, முருகனைப் பற்றிய பாடல்கள், நடனம், நாடகம், மங்கல இசை என தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் 5 அரங்குகளில் ஆய்வு கட்டுரைகள் மீது விவாதமும் நடைபெறவுள்ளது. அதற்காக 1,300 கட்டுரைகள் பலரால் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் திருவாடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், குருமகா சந்நிதானம், சிரவை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 15 ஆதீனங்கள் மற்றும் 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதுதவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 3-டி வடிவில் முருகனை அருகில் இருந்து தரிசனம் செய்யும் வகையிலும், 100 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முருகனின் பெருமையை விளக்கும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், முருகன் புகழை சொல்லும் கும்மியாட்டம், கந்த சஷ்டி கவசம் என காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், தொடர்ந்து 2 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டை முன்னிட்டு 8 இடங்களில் அலங்கார வரவேற்பு, தலைவர்கள் மாநாட்டு வரும்போது 5000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு கண்காட்சிக்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்பதால் சுகாதாரத்துறை சார்பில் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்காகவும், தூய்மை பணியாளர்கள், பிரத்யேகமான மருத்துவ வாகனங்கள், கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 450-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்கள் சீருடையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகைதரும் அனைவருக்கும் 200 கிராம் அளவிலான பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, லேமினேசன் செய்யபட்ட முருகன் போட்டோ வழங்க பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளுன. மேலும் இந்த மாநாட்டிற்காக மக்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டம் அதிகமாக இருப்பதால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முதல்முறையாக இந்த மாநாடு பெரிய அளவில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.