ETV Bharat / state

கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம் - Trichy family suicide

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 2:26 PM IST

Trichy Family Suicide: திருச்சியில் கடன் பிரச்சனை காரணமாக தாய் மற்றும் குழந்தைகள் உட்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம் (Image Credit -ETV Bharat)

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் தெருவைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கீர்த்திகா (32) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில், கோகுல்நாத் (14) என்ற மகனும், சாய் நந்தினி(11) என்ற மகளும் உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9 மற்றும் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

தம்பதியினர் இருவரும் கூலி வேலை பார்த்து வந்த நிலையில், கீர்த்திகா மகளிர் சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும், அதனால் குடும்பத்தில் கடன் பிரச்சனை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து தம்பதியினர் அவ்வப்போது "கடனை எவ்வாறு திருப்பிக் கொடுப்பது" என மனவேதனையில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம் போல், கிருஷ்ணமூர்த்தி ரைஸ் மில்லுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும் தற்கொலை செய்து, சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை செய்து கொண்டவர்கள்
தற்கொலை செய்து கொண்டவர்கள் (credits - ETV Bharat Tamil Nadu)

கடன் சுமையால் மனவேதனையில் இருந்து வந்த கீர்த்திகா நேற்றிரவு தனது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளதாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: தற்கொலை எதற்கும் தீர்வல்ல; சொந்த காரணங்களாலோ அல்லது மனஅழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: குஜராத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து கோர விபத்து!

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் தெருவைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, கீர்த்திகா (32) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில், கோகுல்நாத் (14) என்ற மகனும், சாய் நந்தினி(11) என்ற மகளும் உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9 மற்றும் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

தம்பதியினர் இருவரும் கூலி வேலை பார்த்து வந்த நிலையில், கீர்த்திகா மகளிர் சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும், அதனால் குடும்பத்தில் கடன் பிரச்சனை இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து தம்பதியினர் அவ்வப்போது "கடனை எவ்வாறு திருப்பிக் கொடுப்பது" என மனவேதனையில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம் போல், கிருஷ்ணமூர்த்தி ரைஸ் மில்லுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும் தற்கொலை செய்து, சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை செய்து கொண்டவர்கள்
தற்கொலை செய்து கொண்டவர்கள் (credits - ETV Bharat Tamil Nadu)

கடன் சுமையால் மனவேதனையில் இருந்து வந்த கீர்த்திகா நேற்றிரவு தனது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளதாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: தற்கொலை எதற்கும் தீர்வல்ல; சொந்த காரணங்களாலோ அல்லது மனஅழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: குஜராத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து கோர விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.