ETV Bharat / state

”தெற்காசியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்” - மு.க.ஸ்டாலின் பேச்சு! - SIPCOT Quarters

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 10:12 PM IST

TN CM MK Stalin: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் - வடகால் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக ரூ.706.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் (Credits - TN DIPR X Page)

சென்னை: இந்தியாவிலேயே முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் - வடகால் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக ரூ.706.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக 17) திறந்து வைத்தார்.

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது, "உலகளாவிய நிறுவனமாக இருந்தாலும் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் சிறப்பான இந்தியச் செயல்பாடுகளுக்காக அதன் தலைவர் யாங் லீயுக்கு 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக, யாங் லீயுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் பல சிறப்புகளை, பெருமைகளை பெற வேண்டும் அதற்காக வாழ்த்துகிறேன்.

தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான், உலகத்திலேயே மிகப்பெரிய மின்னணுவியல் உற்பத்தி நிறுவனம். உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான உதிரி பாகங்களை பொருத்தி ஒருங்கிணைக்கும் நிறுவனம் இது.

12 நாடுகளில் தன்னுடைய உற்பத்தி நிறுவனங்களை அமைத்திருக்கிறது. இந்த குழுமம் தமிழ்நாட்டில் திருப்பெரும்புதூரில் இரண்டு உற்பத்தி அலகுகளை நிறுவி இருப்பது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை. இதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 41 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றால், அதில் 35 ஆயிரம் பேர் பெண்கள். ஆணுக்குப் பெண் சமம் என்பதை தாண்டி, ஆண்களைவிட கூடுதலான பெண் தொழிலாளர்கள் இருப்பதை பெண் எனும் பேராற்றலுக்குத் தரும் முக்கியத்துவமாகவே பார்க்கிறேன்.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும் விட தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருக்கிறது. அதாவது, 42 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது. அந்த வகையில், உங்கள் நிறுவனத்தின் சமத்துவ நோக்கத்தை பாராட்டுகிறேன். பெண்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பணிக்குச் செல்லும் தாய்மார்களின் நலன் கருதி, சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்கனவே 63 குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. மேலும், சிப்காட் நிறுவனம் நேரடியாக குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்த முடிவெடுத்து இருக்கிறது.

பெண்களை தொழில்முனைவோராக உருவாக்க இளம் வயதிலேயே ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்காக, உலக வங்கி உதவியோடு தமிழ்நாடு அரசு WE SAFE திட்டத்தை தொடங்கி பயிற்சி அளித்துக் கொண்டு வருகிறது.

நம்முடைய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்கு ஆசியாவிலேயே முன்னணி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று இலட்சிய இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் வெற்றியும் பெற்று வருகிறோம்.

நிதி ஆயோக் அமைப்பின் 2023-2024ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகிய குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருக்கிறது. பத்து குறியீடுகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 13 குறியீடுகளில் தமிழ்நாடு 11ல் தேசிய சராசரியை விட அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது.

2023-2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.19 விழுக்காடு பங்களிப்போடு தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே பன்முகத்தன்மையோடு தொழில் துறைக்கு சாதகமான அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

நம்முடைய மாநிலத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள இருக்கிறது. இதனால் உற்பத்தியும் அதிகம் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பும் அதிகம் உருவாக்கப்படுகிறது. சிப்காட் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்தோடு இணைந்து திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் வடகால் கிராமத்தில் அமைத்திருக்கும் தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான தங்குமிட வசதியை திறந்து வைத்திருக்கிறேன்.

706 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இது அமைந்திருக்கிறது. 18 ஆயிரத்து 720 படுக்கைகள் கொண்டதாக இது இருக்கிறது. பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் முன்னோடித் திட்டம் இந்த திட்டம். தொழில் வளர்ச்சி மூலமாகத்தான் வேலைவாய்ப்பு பெருகும். பொருளாதாரமும் விரைவான வளர்ச்சி பெறும். அதனால்தான் தொழில் வளர்ச்சியில் நாங்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடங்கி செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

'பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி', 'சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி' என்பதை உறுதி செய்யும் வகையில், நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் தொழிற் பூங்காக்கள் இல்லாத மாவட்டங்களில், புதிதாக தொழிற் பூங்காக்கள் அமைக்க முடிவெடுத்தோம். அதேபோல், 45 ஆயிரம் ஏக்கர் நில வங்கி உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தேன்.

இப்போது வரைக்கும் 41 ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனுடைய சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் சிப்காட் நில வங்கியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. சிப்காட் நிறுவனம் மூலம் இருங்காட்டுகோட்டை திருப்பெரும்புதூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் ஆகிய இடங்களில் மூன்று தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.

இந்த வசதிகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வதோடு, உங்கள் சொந்த குடியிருப்புகளை எவ்வளவு கவனமாக பராமரிப்பீர்களோ, அதே அளவுக்கு இந்த விடுதிகளையும் சிறப்பாக பராமரிக்க முழு ஒத்துழைப்பையும் நீங்கள் வழங்க வேண்டும் என்று தொழிலாளத் தோழர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். அந்த இலக்கை நாம் விரைவாக எட்டுவோம்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. அதற்கு ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஒரே நாளில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு தீர்வு.. நெல்லை மேயர் அதிரடி! - Nellai Sanitation workers salary

சென்னை: இந்தியாவிலேயே முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் - வடகால் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக ரூ.706.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக 17) திறந்து வைத்தார்.

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது, "உலகளாவிய நிறுவனமாக இருந்தாலும் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் சிறப்பான இந்தியச் செயல்பாடுகளுக்காக அதன் தலைவர் யாங் லீயுக்கு 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக, யாங் லீயுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இன்னும் பல சிறப்புகளை, பெருமைகளை பெற வேண்டும் அதற்காக வாழ்த்துகிறேன்.

தைவான் நாட்டைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான், உலகத்திலேயே மிகப்பெரிய மின்னணுவியல் உற்பத்தி நிறுவனம். உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான உதிரி பாகங்களை பொருத்தி ஒருங்கிணைக்கும் நிறுவனம் இது.

12 நாடுகளில் தன்னுடைய உற்பத்தி நிறுவனங்களை அமைத்திருக்கிறது. இந்த குழுமம் தமிழ்நாட்டில் திருப்பெரும்புதூரில் இரண்டு உற்பத்தி அலகுகளை நிறுவி இருப்பது நமக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை. இதற்காக ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 41 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றால், அதில் 35 ஆயிரம் பேர் பெண்கள். ஆணுக்குப் பெண் சமம் என்பதை தாண்டி, ஆண்களைவிட கூடுதலான பெண் தொழிலாளர்கள் இருப்பதை பெண் எனும் பேராற்றலுக்குத் தரும் முக்கியத்துவமாகவே பார்க்கிறேன்.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும் விட தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருக்கிறது. அதாவது, 42 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது. அந்த வகையில், உங்கள் நிறுவனத்தின் சமத்துவ நோக்கத்தை பாராட்டுகிறேன். பெண்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பணிக்குச் செல்லும் தாய்மார்களின் நலன் கருதி, சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்கனவே 63 குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. மேலும், சிப்காட் நிறுவனம் நேரடியாக குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்த முடிவெடுத்து இருக்கிறது.

பெண்களை தொழில்முனைவோராக உருவாக்க இளம் வயதிலேயே ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்காக, உலக வங்கி உதவியோடு தமிழ்நாடு அரசு WE SAFE திட்டத்தை தொடங்கி பயிற்சி அளித்துக் கொண்டு வருகிறது.

நம்முடைய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்கு ஆசியாவிலேயே முன்னணி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று இலட்சிய இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் வெற்றியும் பெற்று வருகிறோம்.

நிதி ஆயோக் அமைப்பின் 2023-2024ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகிய குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருக்கிறது. பத்து குறியீடுகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 13 குறியீடுகளில் தமிழ்நாடு 11ல் தேசிய சராசரியை விட அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது.

2023-2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.19 விழுக்காடு பங்களிப்போடு தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே பன்முகத்தன்மையோடு தொழில் துறைக்கு சாதகமான அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

நம்முடைய மாநிலத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள இருக்கிறது. இதனால் உற்பத்தியும் அதிகம் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பும் அதிகம் உருவாக்கப்படுகிறது. சிப்காட் நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்தோடு இணைந்து திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம் வடகால் கிராமத்தில் அமைத்திருக்கும் தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான தங்குமிட வசதியை திறந்து வைத்திருக்கிறேன்.

706 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இது அமைந்திருக்கிறது. 18 ஆயிரத்து 720 படுக்கைகள் கொண்டதாக இது இருக்கிறது. பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் முன்னோடித் திட்டம் இந்த திட்டம். தொழில் வளர்ச்சி மூலமாகத்தான் வேலைவாய்ப்பு பெருகும். பொருளாதாரமும் விரைவான வளர்ச்சி பெறும். அதனால்தான் தொழில் வளர்ச்சியில் நாங்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடங்கி செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

'பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி', 'சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி' என்பதை உறுதி செய்யும் வகையில், நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் தொழிற் பூங்காக்கள் இல்லாத மாவட்டங்களில், புதிதாக தொழிற் பூங்காக்கள் அமைக்க முடிவெடுத்தோம். அதேபோல், 45 ஆயிரம் ஏக்கர் நில வங்கி உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தேன்.

இப்போது வரைக்கும் 41 ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனுடைய சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் சிப்காட் நில வங்கியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. சிப்காட் நிறுவனம் மூலம் இருங்காட்டுகோட்டை திருப்பெரும்புதூர் மற்றும் திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் ஆகிய இடங்களில் மூன்று தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.

இந்த வசதிகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வதோடு, உங்கள் சொந்த குடியிருப்புகளை எவ்வளவு கவனமாக பராமரிப்பீர்களோ, அதே அளவுக்கு இந்த விடுதிகளையும் சிறப்பாக பராமரிக்க முழு ஒத்துழைப்பையும் நீங்கள் வழங்க வேண்டும் என்று தொழிலாளத் தோழர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். அந்த இலக்கை நாம் விரைவாக எட்டுவோம்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்பான செயல்பாடுகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. அதற்கு ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஒரே நாளில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு தீர்வு.. நெல்லை மேயர் அதிரடி! - Nellai Sanitation workers salary

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.