ETV Bharat / state

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ‘ரூமி 1’ ஹைப்ரிட் ராக்கெட் - மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு! - MISSION RHUMI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 8:30 AM IST

Mission RHUMI 2024 launched: இந்தியாவின் முதல் Reusable ஹைபிரிட் ராக்கெட் RHUMI 1 இன்று (ஆக.24) காலையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது நமது அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் எல்லை இல்லா ஆற்றலை நிரூபித்து இருக்கிறது என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை புகழ்ந்துள்ளார்.

MISSION RHUMI 2024
MISSION RHUMI 2024 (Credits- ETV Bharat Tamil Nadu)

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த திருவிடந்தை கடற்கரையில், ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து தயாரித்த இந்தியாவில் முதல்முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ரூமி 1’ ஹைப்ரிட் ராக்கெட், 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்து மீண்டும் பூமிக்கு திரும்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மயில்சாமி அண்ணாதுரை பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதியதொரு சாதனையாக ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து தயாரித்த ஹைபிரிட் 'ராக்கெட் ரூமி 1' இன்று காலை 7.02 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அந்த செயற்கைகோள்களை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி மீண்டும் பூமிக்கு திரும்பியது.

இந்திய விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாக, ரூமி 1 ராக்கெட் இந்தியாவின் முதல் 0 முதல் 120 டிகிரி வரை வெவ்வேறு கோணங்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஏவும் ஹைட்ராலிக் மொபைல் ஏவுதளத்தில் இருந்து மூன்று கியூப் செயற்கைக்கோள்களை சுமந்து சென்று, புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி, வெறும் 7 நிமிடங்களில் பாதுகாப்பாக பூமிக்கு தரை இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்த ராக்கெட் காஸ்மிக் கதிர்வீச்சின் தீவிரம், புறஊதா கதிர்வீச்சின் தீவிரம், காற்றின் தரம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வளிமண்டல நிலைகளை கண்காணிக்கும் 3 செயற்கைக்கோள்களுடன் 50 வெவ்வேறு சிறிய எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஓசோன் படலம், வளிமண்டல நிலைகளின் பல்வேறு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், "இந்தியாவின் சந்திர மனிதன்" என்று அழைக்கப்படும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், மார்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, "ரூமி 1 இந்தியாவின் விண்வெளி ஆய்வில் புதிய அளவுகோல்களை அமைத்திருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு வந்திருப்பது என்பது நமது அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் எல்லை இல்லா ஆற்றலை நிரூபித்து இருக்கிறது.

தமிழ்நாட்டின் இந்த பணி தொழில்நுட்பத்திற்கான வெற்றி மட்டுமல்ல, இக்கால விண்வெளி முயற்சிகளுக்கு உத்வேகமாகவும் இருக்கும். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தி விண்வெளியில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதற்காக ஸ்பேஸ் சோன் இந்தியா குழுவினருக்கும், மார்ட்டின் குழுமத்துக்கும் வாழ்த்துக்கள்" என்று மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: JUICE MISSION BY ESA: "கனவெல்லாம் பலிக்குதே" வியாழனை நோக்கிப் பாயும் விண்கலம்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த திருவிடந்தை கடற்கரையில், ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து தயாரித்த இந்தியாவில் முதல்முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ரூமி 1’ ஹைப்ரிட் ராக்கெட், 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்து மீண்டும் பூமிக்கு திரும்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மயில்சாமி அண்ணாதுரை பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதியதொரு சாதனையாக ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து தயாரித்த ஹைபிரிட் 'ராக்கெட் ரூமி 1' இன்று காலை 7.02 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அந்த செயற்கைகோள்களை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி மீண்டும் பூமிக்கு திரும்பியது.

இந்திய விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாக, ரூமி 1 ராக்கெட் இந்தியாவின் முதல் 0 முதல் 120 டிகிரி வரை வெவ்வேறு கோணங்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஏவும் ஹைட்ராலிக் மொபைல் ஏவுதளத்தில் இருந்து மூன்று கியூப் செயற்கைக்கோள்களை சுமந்து சென்று, புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி, வெறும் 7 நிமிடங்களில் பாதுகாப்பாக பூமிக்கு தரை இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்த ராக்கெட் காஸ்மிக் கதிர்வீச்சின் தீவிரம், புறஊதா கதிர்வீச்சின் தீவிரம், காற்றின் தரம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வளிமண்டல நிலைகளை கண்காணிக்கும் 3 செயற்கைக்கோள்களுடன் 50 வெவ்வேறு சிறிய எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஓசோன் படலம், வளிமண்டல நிலைகளின் பல்வேறு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், "இந்தியாவின் சந்திர மனிதன்" என்று அழைக்கப்படும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், மார்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, "ரூமி 1 இந்தியாவின் விண்வெளி ஆய்வில் புதிய அளவுகோல்களை அமைத்திருப்பதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு வந்திருப்பது என்பது நமது அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் எல்லை இல்லா ஆற்றலை நிரூபித்து இருக்கிறது.

தமிழ்நாட்டின் இந்த பணி தொழில்நுட்பத்திற்கான வெற்றி மட்டுமல்ல, இக்கால விண்வெளி முயற்சிகளுக்கு உத்வேகமாகவும் இருக்கும். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தி விண்வெளியில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதற்காக ஸ்பேஸ் சோன் இந்தியா குழுவினருக்கும், மார்ட்டின் குழுமத்துக்கும் வாழ்த்துக்கள்" என்று மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: JUICE MISSION BY ESA: "கனவெல்லாம் பலிக்குதே" வியாழனை நோக்கிப் பாயும் விண்கலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.