ETV Bharat / state

40 வருடக் கனவுத் திட்டமான "சென்னம்பட்டி கால்வாய்" - ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னம்பட்டி கால்வாய் புனரமைக்கப்பட்ட வழித்தடத்தில் வரும் நீர்வரத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு மலர் தூவி தண்ணீரை வரவேற்று ஆய்வு செய்தார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

நீர்வரத்தை மலர் தூவி வரவேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு
நீர்வரத்தை மலர் தூவி வரவேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு (Credits - ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் விவசாய பெருங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு சென்னம்பட்டி அணைக்கட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் உரிய நேரத்தில் பணிகள் நிறைவடையாமல் இருந்ததால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இதனனையடுத்து விவசாய மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சென்னம்பட்டி அணைக்கட்டு கனவுத் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு குரல் கொடுத்தார். இந்நிலையில் அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறை மானிய கோரிக்கையிலிருந்து இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து சுமார் 15 கோடி செலவிட்டில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. முன்னதாக கடந்த மாதம் "சென்னம்பட்டி அணைக்கட்டு - வலது கால்வாயை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இத்திட்டத்தினால் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் உள்ள 19 கண்மாய்களுக்கு நீர் கிடைக்கும்.

இதையும் படிங்க: நடுவானில் திடீர் இயந்திரக் கோளாறு.. 2 மணி நேர திக் திக் பயணம்.. திருச்சி விமான நிலையத்தில் நடந்தது என்ன?

இதன் மூலம் 746.62 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று விவசாய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வழி வகுப்பதற்காக தொடங்கப்பட்டது. தொடர்ந்து சென்னம்பட்டி வலது கால்வாயில் சென்னம்பட்டியில் இருந்து மல்லாங்கிணறு வரை செல்லும் இந்த கால்வாயில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து வருவதை அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி வரவேற்று நீர்வரத்தினை ஆய்வு செய்தார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு நந்திக்குண்டு பகுதிகளில் கால்வாயில் தண்ணீர் வருவதை அப்பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் விவசாய பெருங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு சென்னம்பட்டி அணைக்கட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் உரிய நேரத்தில் பணிகள் நிறைவடையாமல் இருந்ததால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

இதனனையடுத்து விவசாய மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சென்னம்பட்டி அணைக்கட்டு கனவுத் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு குரல் கொடுத்தார். இந்நிலையில் அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறை மானிய கோரிக்கையிலிருந்து இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து சுமார் 15 கோடி செலவிட்டில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. முன்னதாக கடந்த மாதம் "சென்னம்பட்டி அணைக்கட்டு - வலது கால்வாயை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இத்திட்டத்தினால் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் உள்ள 19 கண்மாய்களுக்கு நீர் கிடைக்கும்.

இதையும் படிங்க: நடுவானில் திடீர் இயந்திரக் கோளாறு.. 2 மணி நேர திக் திக் பயணம்.. திருச்சி விமான நிலையத்தில் நடந்தது என்ன?

இதன் மூலம் 746.62 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று விவசாய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வழி வகுப்பதற்காக தொடங்கப்பட்டது. தொடர்ந்து சென்னம்பட்டி வலது கால்வாயில் சென்னம்பட்டியில் இருந்து மல்லாங்கிணறு வரை செல்லும் இந்த கால்வாயில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து வருவதை அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி வரவேற்று நீர்வரத்தினை ஆய்வு செய்தார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு நந்திக்குண்டு பகுதிகளில் கால்வாயில் தண்ணீர் வருவதை அப்பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.