ETV Bharat / state

திமுக ஆட்சி இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்! - minister sekar babu - MINISTER SEKAR BABU

Minister sekar babu: இந்த ஆண்டு இறுதிக்குள் 250 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 8:09 PM IST

திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலோடு இணைந்தது மானூா் அம்பலவாண சுவாமி திருக்கோயில். இந்த கோயில் 8ஆம் நுற்றாண்டை சோ்ந்தது. இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடப்பட்டு கடந்த வருடம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், 117 ஆண்டுகள் கழித்து இன்று அஷ்டபந்தன மஹாகும்பாபிஷே விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

அமைச்சர் சேகர் பாபு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 6ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கப்பட்டு யாகசால பூஜைகள் நடந்து வந்தது. அதனைத்தொடர்ந்து, சுவாமி விமான கோபுரம் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது , “மானூர் சுவாமி கோயிலில் 117 ஆண்டுகளுக்கு பின்பு குடமுழுக்கு நடந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற முதல் 2021- 22 ஆண்டில் 1000 ஆண்டுகள் தொன்மையான கோயில்கள் மற்றும் போதிய வருமானம் இல்லாத கோயில்களில் குடமுழுக்கு நடத்த 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

2098 கோயில்கள் குடமுழுக்கு: 2023-2024, 2024-2025 என மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் 142 கோடி பெறப்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான 37 திருக்கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றுவரை நெல்லை மானூர் அம்பலவானசுவாமி கோவிலுடன் சேர்த்து 2098 கோயில்கள் குடமுழுக்கு நடந்துள்ளது.

250 கோவிலில் குடமுழுக்கு செய்ய திட்டம்: இன்று மட்டும் 55 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 250 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மானுர் அம்பலவான சுவாமி கோயிலுக்கு செந்தமான 173 ஏக்கர் நஞ்சை, 28 ஏக்கர் புஞ்சை நிலங்கள் முழுவதும் குத்தகைக்குவிடப்பட்டு அந்த தொகை கோயிலின் அன்றாட செலவுகளுக்கு பயன் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியின் திட்டங்களின் பட்டியல்: நூறாண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான 16 திருக்கோயிலுக்கும் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட 60 திருக்கோயில்களுக்கும் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 805 திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 6 ஆயிரத்து 703 கோடி மதிப்புள்ள சுமார் 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் திமுக ஆட்சியில்தான் கைப்பற்றப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் தான் 92 கோடி செலவில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது.ரூ. 59 கோடி செலவில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருகிறது. 11 கோடி 93 லட்சம் செலவில் மரத்தேர் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. 28 கோடியே 44 லட்சம் செலவில் 172 கோவில்களில் மரத்தேர் கொட்டகைகள் அமைக்கும் திருப்பணிகள் நடந்து வருகிறது. 29 கோடி செலவில் 5 புதிய தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.

இன்னும் ஓரிரு மாதத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயில் தங்கத்தேர் பணி நிறைவு பெறும். 9 வெள்ளித்தேர் சுமார் 27 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. 120.33 கோடி செலவில் 220 திருக்குளங்கள் பழுதுபார்க்கப்பட்டுள்ளது 321 கோடி மதிப்பீட்டில் 81 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. 86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. 187 கோடி மதிப்பீட்டில் 28 பக்தர்கள் தங்கும் விடுதியில் கட்டப்பட்டுள்ளது. 136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள் 500 வீடுகள் அர்ச்சகர்கள் திருக்கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.

பொற்கால ஆட்சி: மேலும், ரூ.1530 கோடி செலவில் 19 திருக்கோவில்களில் பெருந்திட்டவரை மேற்கொள்ளப்பட்டு திருச்செந்தூர் பழனி உட்பட பணிகள் நடந்து வருகிறது தொடர்ந்து இவ்வாறு திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம், திராவிடமாடல் திமுக ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்கால ஆட்சி” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நடிகை நமிதா வருத்தப்பட வேண்டாம்; அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

திருநெல்வேலி: நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலோடு இணைந்தது மானூா் அம்பலவாண சுவாமி திருக்கோயில். இந்த கோயில் 8ஆம் நுற்றாண்டை சோ்ந்தது. இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடப்பட்டு கடந்த வருடம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், 117 ஆண்டுகள் கழித்து இன்று அஷ்டபந்தன மஹாகும்பாபிஷே விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

அமைச்சர் சேகர் பாபு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 6ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கப்பட்டு யாகசால பூஜைகள் நடந்து வந்தது. அதனைத்தொடர்ந்து, சுவாமி விமான கோபுரம் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது , “மானூர் சுவாமி கோயிலில் 117 ஆண்டுகளுக்கு பின்பு குடமுழுக்கு நடந்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற முதல் 2021- 22 ஆண்டில் 1000 ஆண்டுகள் தொன்மையான கோயில்கள் மற்றும் போதிய வருமானம் இல்லாத கோயில்களில் குடமுழுக்கு நடத்த 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

2098 கோயில்கள் குடமுழுக்கு: 2023-2024, 2024-2025 என மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உபயதாரர்கள் மூலம் 142 கோடி பெறப்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான 37 திருக்கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றுவரை நெல்லை மானூர் அம்பலவானசுவாமி கோவிலுடன் சேர்த்து 2098 கோயில்கள் குடமுழுக்கு நடந்துள்ளது.

250 கோவிலில் குடமுழுக்கு செய்ய திட்டம்: இன்று மட்டும் 55 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 250 திருக்கோயில்களில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மானுர் அம்பலவான சுவாமி கோயிலுக்கு செந்தமான 173 ஏக்கர் நஞ்சை, 28 ஏக்கர் புஞ்சை நிலங்கள் முழுவதும் குத்தகைக்குவிடப்பட்டு அந்த தொகை கோயிலின் அன்றாட செலவுகளுக்கு பயன் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியின் திட்டங்களின் பட்டியல்: நூறாண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான 16 திருக்கோயிலுக்கும் நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட 60 திருக்கோயில்களுக்கும் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 805 திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 6 ஆயிரத்து 703 கோடி மதிப்புள்ள சுமார் 6 ஆயிரத்து 853 ஏக்கர் நிலம் திமுக ஆட்சியில்தான் கைப்பற்றப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் தான் 92 கோடி செலவில் 47 புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது.ரூ. 59 கோடி செலவில் புதிய மரத்தேர்கள் செய்யப்பட்டு வருகிறது. 11 கோடி 93 லட்சம் செலவில் மரத்தேர் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. 28 கோடியே 44 லட்சம் செலவில் 172 கோவில்களில் மரத்தேர் கொட்டகைகள் அமைக்கும் திருப்பணிகள் நடந்து வருகிறது. 29 கோடி செலவில் 5 புதிய தங்கத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.

இன்னும் ஓரிரு மாதத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயில் தங்கத்தேர் பணி நிறைவு பெறும். 9 வெள்ளித்தேர் சுமார் 27 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. 120.33 கோடி செலவில் 220 திருக்குளங்கள் பழுதுபார்க்கப்பட்டுள்ளது 321 கோடி மதிப்பீட்டில் 81 புதிய திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. 86.97 கோடி மதிப்பீட்டில் 121 அன்னதான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. 187 கோடி மதிப்பீட்டில் 28 பக்தர்கள் தங்கும் விடுதியில் கட்டப்பட்டுள்ளது. 136 கோடி மதிப்பீட்டில் 89 குடியிருப்புகள் 500 வீடுகள் அர்ச்சகர்கள் திருக்கோவில் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ளது.

பொற்கால ஆட்சி: மேலும், ரூ.1530 கோடி செலவில் 19 திருக்கோவில்களில் பெருந்திட்டவரை மேற்கொள்ளப்பட்டு திருச்செந்தூர் பழனி உட்பட பணிகள் நடந்து வருகிறது தொடர்ந்து இவ்வாறு திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம், திராவிடமாடல் திமுக ஆட்சிதான் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்கால ஆட்சி” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: நடிகை நமிதா வருத்தப்பட வேண்டாம்; அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.